"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


ரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி "இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம்.

இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100-க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வ மகா நிஜம்!

மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டியுப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்... வெரி சிம்பிள்! "இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்ப!

உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சிகளை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்.

இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்யு போத்தா "கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டியுபில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.

வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் "அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு வேலை யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது.

தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.

சாவு என்பது ஒரு சாதாரண நிகழ்வு. தேவையில்லாமல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத்திற்கு முன்னதாக முதுமைக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து.

இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக்கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.

இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்பரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்திருக்கிறார் மிக்கேல்.

முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்... என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

உயிர் பிரியும் போது வலிக்குமா வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதைகளால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார்கள்.

செத்துப்போன உடலை ரோபோ போல் நவீன எந்திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமா? என்ற நம்பிக்கையில் கடந்த 18 ஆண்டுகளாக நூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கிறார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர் என்றால், "எதையும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.

இந்த அதிர்ச்சி விஞ்ஞானிகள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமா என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும்
தவறவில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறது என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

"கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானிகளின் அருமை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ்ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இறந்து போன பிணங்களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவிகள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார்.

இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்... பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டியதிருக்கும்.

"அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

87வயசு வரை வாழலாம்

ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலகமக்கள் தொகை ஆய்வு அமைப்பு 2050-ம் ஆண்டில் மக்கள் தொகை பற்றி ஒரு ஆய்வு செய்துள்ளது.

இது பற்றிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் 2050-ல் உலக மக்கள் தொகை 920 கோடியாக இருக்கும். அமெரிக்கர்களின் இப்போதைய சராசரி வாழ்நாள் 77.5 ஆண்டுகள் ஆகும். இந்தியர்களின் வாழ்க்கை காலம் 64.7 ஆண்டுகள் முதல் 75.5 ஆண்டுகள் வரை.

2050 ஆண்டு வாக்கில் இந்தியர்களின் வாழ்நாள் இன்னும் 11 ஆண்டுகள் அதிகரிக்கும்.

இந்தியாவில் இப்போது 80 வயதை தாண்டியவர்கள் 78 லட்சமாகவும், 65 வயதை தாண்டியவர்கள் 7 கோடி பேரும், 60 வயதை தாண்டியவர்கள் 33 கோடியாகவும் உள்ளனர். இவர்கள் முறையே வருகிற 2050 ஆண்டில் 5 கோடியே 20 லட்சம் பேர், 24 கோடி பேர், 85 கோடி பேராக இருப்பார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1174426076&archive=&start_from=&ucat=2

நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வங்கியியலும் இதிலிருந்து விதிவிலக்காக முடியுமா என்ன? இன்று அனைத்துப் பிரபலமான வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளான மின்சாரப் பயனீட்டுக்கட்டணம், ரயில் பயணச்சீட்டு, விமானப்பயணச்சீட்டு எனப் பல சேவைகளுக்கான கட்டணத்தை இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்பெறுமாறு தமது வங்கிக்கணக்கு வசதிகளை அமைத்துள்ளன.

இதற்காக தனது வங்கிக்கணக்குகளை இணையம் மூலமாகவே கையாளும் முறையையும் வங்கிகள் அறிமுகப்படுத்தி உள்ளன. பணத்தைக் கையால் தொடாமலே இன்றைய உலகில் சம்பாதிப்பதும் அதனைச் செலவு செய்வதும் பரவலாக நடந்து வருகிறது. இதில் இவ்வளவு வசதிகள் இருந்தாலும், இதில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. நுட்பத்தினால் வசதிகள் வளரும்போது அதனைத் தவறாகப் பயன்படுத்தி பணத்தைக் கையாடல் செய்யும் தீயவர்களின் உத்தியும் அதனுடனேயே வளர்கிறது. எனவே வங்கிக் கணக்குகளுக்கான கடவுச் சொற்களையும் (Passwords) கடன் அட்டை (Credit card) எண்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். அவை தீயவர்களின் கையில் சிக்கினால் அவற்றின் மூலம் பணக்கையாடல் செய்து திருட்டுகள் செய்யவும் வழிகோலுகிறது.

வங்கிகள் பலவும் தங்கள் வாடிக்கையாளர்கள் இந்த முறையில் பணபரிமாற்றம் செய்வதையும், வங்கி கணக்குகளை கையாள்வதையும் பெரிதும் ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த இணைய வழி பரிமாற்றம் முதலீட்டு சந்தை வர்த்தகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த முறை மிக வசதியாய் இருப்பதால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வங்கிகளில் நடைபெற்ற அடையாளத் திருட்டு (Identity Theft) மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வங்கிக் கணக்கு விபரங்களை (Account Details) மின்னஞ்சலில் கேட்டு வங்கி முகவரியிலிருந்து வருவது போல் பாவனை செய்து வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் போதே இது போன்ற திருட்டுக்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற கடிதங்கள் வரும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

எந்த ஒரு பொறுப்புள்ள வங்கியும் தனது வாடிக்கையாளரின் கடவுச் சொல்லைக் கேட்டு மின்மடல் அனுப்பவோ அல்லது தொலைபேசி மூலம் அழைப்போ செய்யாது. அவ்வாறு கடவுச் சொல் போன்ற தனிப்பட்ட தகவல்கள் (Private credentials) கோரப்பட்டால் நிச்சயம் அது திருட்டு முயற்சியாகத் தான் இருக்கும். எனவே இது போன்ற மின்மடல்கள், தொலைபேசி அழைப்புகள் வந்தால் கவனமாக இருக்கவேண்டும். இந்த வகை தகவல் திருட்டுக்களால் நாட்டின் முன்னேற்றம் பெரியளவில் பாதிக்கப்படுகிறது. இணைய வழி அரசு நிர்வாகம் மற்றும் இணைய வழி பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் நம்பகத்தன்மை முழுவதுமாகவே சந்தேகத்திற்கு உள்ளாகி விடுகிறது.

மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளக் கூடாத தகவல்களான இவற்றை சிலர் இவை மறக்காமல் இருக்க காகிதங்களில் எழுதி வைத்துள்ளதையும் காணலாம். இதுவும் தவறான வழிமுறையாகும். இது தீயவர் எவரது கையில் சிக்கினால் ஆபத்து தான். கடினமான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுப்பதுடன் அவற்றை மனனம் செய்து வைத்துக் கொள்ளுதலே சிறந்தது. இணைய உலாவு மையங்களில் (Browsing centers) இதுபோன்ற வங்கி தொடர்பான பரிமாற்றங்களைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது.

சில வங்கிகள் இது போன்ற கையாடல்களைத் தடுக்க பண அளவுக்கான உச்சவரம்பு விதித்துள்ளன. ஒவ்வொரு பரிமாற்றத்தையும் குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கும் வசதியையும் பெரும்பாலான வங்கிகள் அளிக்கின்றன. இதனையும் பயன்படுத்தி விழிப்புடன் இருக்க இயலும்.

இவை தவிர தொழில்நுட்ப வழியில் செய்யப்படும் கயமைத் தனங்களை (fraud) புகார் செய்ய காவல் துறையின் இணையக்குற்றப் புலனாய்வுப் (Cybercrime) பிரிவும், வங்கியின் தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

வங்கிகளும் அதிகப் பாதுகாப்பு நிறைந்த 128 படி சங்கேதக்குறியேற்றம் (128 bit encryption) கொண்ட மென்பொருள்களைப் பயன்படுத்துவதோடு வெரிசைன் (Verisign) தாவ்டே (thawte) போன்ற பிரபல இணைய எண்குறியேற்ற சான்றிதழ்களையும் (Digital certificates) பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மன நிம்மதியுடன் வங்கிகளை இணையத்தில் பயன்படுத்த ஆவன செய்யவேண்டும்.

அதோடு நாம் வங்கியின் பாதுகாக்கப்பட்ட இணையப்பக்கத்தில் (secure webpage) தான் இருக்கிறோமா என்று பயனர்களும் கவனிக்க வேண்டும். (இதனை வங்கிகள் https:// என்று தொடங்கும் பக்கமாக வைத்திருக்கின்றன. இதனையும் கவனித்தல் அவசியம்) நமது கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றிவர வேண்டும். நமது பணி முடிந்தவுடன் அனைத்து திரைகளையும் முடிவிட வேண்டும். மேலும் உலாவியின் (browser) தற்காலிக சேமிப்புப் பக்கங்களையும் (cache) அழித்துவிடவேண்டும்.

இதுபோன்ற சில குறிப்புகளை பின்பற்றுவதால் பாதுகாப்பான முறையில் இணைய வழி வங்கிக்கணக்கை பராமரிக்கவும், பாதுகாக்கவும், பயனீட்டவும் முடியும். பல இணைய வழி பணபரிமாற்றத்தை நம்பிக்கையுடன் கையாளவும் முடியும்.

http://dailymuslimnews.blogspot.com/2009/02/online-banking.html


20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை.

மின்னஞ்சலின் பயன்கள் ஒருபுறம் குவிந்து கிடக்க அவற்றைக் குலைக்கும் அழையா அஞ்சல் மூலம் விளம்பரம் அனுப்பும் விரும்பத்தகாத அஞ்சல்களை Spam என்று அறியப்படும் எரிதம் என்கிறோம். மின்னஞ்சல் உபயோகிப்பாளர்களுக்கு எரிதம் நன்கு பழக்கமான ஒன்றாக இருக்கும் எனில் வியப்பில்லை.

மின்னஞ்சலைப் பார்வையிடத் தொடங்கும் போது நமது அஞ்சற்பெட்டியில் (Inbox) உள்ள கடிதங்களின் எண்ணிக்கையைப் பார்த்தவுடன் மனதில் மிகுந்த ஆர்வம் உண்டாகி அவற்றைச் சொடுக்கிப் படிக்கத் தொடங்குகிறோம். ஆனால் வந்திருப்பவை எல்லாம் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வந்திருக்கும் விளம்பரக் கடிதங்கள் (அவற்றில் சில முகம் சுளிக்க வைக்கும்) என்றால் எரிச்சல் தானே வரும்?

அட என் முகவரி எப்படி இந்த முகவருக்குச் சென்று சேர்ந்தது என நீங்கள் வியக்கலாம். அது போல நான் எனக்கு நெருங்கியவர்கள் தவிர வேறெவருக்கும் இம்முகவரியைக் கொடுக்கவில்லையே என எண்ணிக் கொண்டிருப்பீர்கள். உண்மையில் இந்த மடல்கள் நபர்களால் எழுதப்படுவதில்லை. பெரும்பாலும் இந்த மடல்கள் தானியங்கிச் செயலிகளால் எழுதப்படுகின்றன.

ஏதோ ஒரு நல்லெண்ணத்தில் நமக்கு தீங்கற்றதாகத் தெரிந்திருக்கும் ஒரு தளத்தில் நாம் நமது முகவரியைப் பதிந்திருக்கலாம். அவ்வகைத் தளங்கள் சரியான பாதுகாப்பு முறையில்லாமல் இருக்கும் பட்சத்தில் இதற்கெனவே இணையத்தை வருடி பாதுகாப்புக் குறைவான தளங்களின் இருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை அறுவடை செய்யும் செயலிகள் பல உள்ளன. இவை இது போன்ற தொல்லை தரும் விளம்பரங்களை நமக்கு அனுப்ப உதவுகின்றன.

இது போன்ற குப்பை மடல்கள் வருவதால் எரிச்சலும், நமக்கு நேர விரயமும் ஆகிறது. இவற்றை அழிப்பதிலேயே சில மணித்துளிகள் செலவழிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விடுகிறது.

இந்த எரிதத்தாக்குதல்கள் இலவச மின்னஞ்சல் வழங்கிகளின் சேவையைப் பெரிதும் பாதித்து வந்தன. ஆனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட கூகிள், ஹாட்மெயில், யாஹூ போன்ற நிறுவனங்கள் இவ்வகை மடல்களை வடிகட்டும் ஆயும் திறனை (logic) உள்ளடக்கி இருக்கின்றன. இதனால் இவற்றை எளிதாகக் கண்டறியவும் ஒரே சொடுக்கில் அத்தனை எரித மடல்களையும் அழிக்கவும் தற்போது இயலுகிறது. அவ்வாறு நாம் அழிக்காவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குப் பின் அவை அழிக்கப்பட்டுவிடும்

இவற்றில் சில அபாயகரமானவை நமக்கு மிக தெரிந்தவர்களின் பெயரில் வரும் மடல்களே, அவற்றுடம் கணினிக்குக் கேடு விளைவிக்கக் கூடிய வைரஸ்களும் கெடுதல் மென்பொருள்களும் (malware) உள்ளடக்கி இருக்கலாம். முதலில் இவற்றைக் கண்டறிந்து விழிப்புடன் அழிப்பது சற்றே அயர்வு அளிக்கக்கூடிய வேலையாக இருந்தாலும் நாளடைவில் இது எளிதாகப் பழகிவிடும்.

இந்த எரித மின்னஞ்சல்களை நம்பி யார் வாங்கப் போகிறார்கள்? எதற்காக இப்படி அனுப்பி வைக்கிறார்கள்? என்று கூட எண்ணத் தோன்றும். ஆனால் உண்மையில் பொருட்களைப் பற்றிய செய்திகளை மக்களிடையே பதிய வைக்க இவ்வகை மின்னஞ்சல்களை சில நிறுவனங்கள் உபயோகிக்கின்றன.

இவற்றைச் சட்டமியற்றிக் கட்டுப்படுத்த இயலாதா என நீங்கள் வியக்கலாம். சில நாடுகளில் எரிதங்களைத் தவிர்க்க சட்டவிதிகளே இயற்றப்பட்டிருக்கின்றன.

இவற்றையும் தாண்டி சில எரிதங்கள் நமக்கு வரலாம். அவற்றை சேவை வழங்கி நிறுவனங்களுக்குத் தெரிவித்தால் அவை தங்களின் ஆயும் திறனை (logic) அதிக கூராக்கி எரிதங்களை மிக எளிதாக வடிகட்டுகின்றன.

சிலமுறை நமக்கு வரவேண்டிய முக்கியமான மடல்களும் இவ்வகை வடிகட்டிகளால் ஒதுக்கப்பட்டு விடலாம். அவற்றையும் நாம் பிரித்தறிந்து இந்தத் தானியங்கி எரித வடிகட்டிக்குத் (Automatic Spam Filter) தெரிவித்தால் நல்ல முறையிலான மின்னஞ்சல் பலனைப் பெறலாம்.

ஆக்கம்: இப்னுஹமீது

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=441&Itemid=55


எந்தவொரு விடயத்திலும் எனது தாயாருடன் உண்டாகும் மனஸ்தாபத்தை குறைப்பது எப்படி?

இது எந்தவொரு வீட்டிலும் உண்டாகும் ஒரு குளப்ப நிலையாகும். இதை சந்ததிகளுககு இடையிலான சச்சரவு என்று கூறுவார்கள். அணியும் உடை, உண்ணும் உணவு, படுக்கையறையின் சுவரின் நிறம், நண்பர்கள், வெளியே போய்வருவதிலிருந்து படுக்கைக்கு செல்லும் நேரம் என எல்லாவற்றிலும் அபிப்பிராயபேதம் உண்டாகும்.

இது ஏன் என நீங்கள் சிந்தித்துப்பார்த்தால், நீங்கள் சிறு வயதாக இருக்கும் போது உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடைவரை உங்களுக்கு தேவையானவற்றை உங்கள் பெற்றோர்தான் தீர்மானித்திருக்கிறார்கள். சுயமாக எதையும் தீர்மானிக்க இயலாத அவ்வயதில் இது உங்களுக்குத் தேவையான பாதுகாப்பு மிக்க விடயமாக இருக்கும்.

ஆனால் நீங்கள் வளரத் தொடங்கி இளவயதை அடையும் போது உங்களுக்குத் தேவையானவற்றை நீங்களே தேர்ந்தெடுக்கும் தன்மையை கொண்டு வளரத் தொடங்கும் போது இவற்றை உங்கள் பெற்றோரால் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும். ஆகவே சில விடயங்களில் உங்களுடன் அவர்கள் ஒத்துப் போக முடியாமல் தவிக்கும போது இருபாலாருக்குமிடையில் சச்சரவும் வாக்குவாதமும் உருவாகும். இதனால் இளவயதினராகிய நீங்கள் உங்களுக்கு தகுந்த மரியாதை பெற்றோரிடமிருந்து கிடைக்கவில்லை என்று கோபமும் பெற்றோருக்கோ நீங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்ற ஆத்திரமும் உருவாகி உங்கள் இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கும்.

ஆனால் இந்த சண்டையில் தோன்றும் ஒரு நன்மை என்னவென்றால் பெற்றோருக்கு தமது பிள்ளைகள் சில விடயங்களில் தம்மைவிட வேறுபட்ட கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்க அவர்களுக்கு உரிமையுண்டு என்பது நன்கு புலப்படும். இருபாலாரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அடுத்தவரின் கருத்தை புரிந்து நடக்க சில வருடங்கள் பிடித்தாலும் இது மிகவும் ஆரோக்கியமான விடயமாக தோன்றத் தலைப்படும்.

சில வேளைகளில் பெற்றோர் உங்களை புரிந்து கொள்ள மறுக்கும் போது உங்களுக்கு இது சரிப்பட்டு வராது என்று வெறுப்பேற்படக்கூடும். ஆனால் நீங்கள் மனம் திறந்து அவர்களுடன் ஆறுதலாக தெளிவாக பேசி அவர்களை புரியவைக்க முயற்சிப்பீர்களானால் அவர்களுக்கு உங்கள் மேல் மதிப்பும் நம்பிக்கையும் உண்டாகும். இதனால் இருவருமே மகிழ்ச்சியாக வாழ வழிபிறக்கும். ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருங்கள் உங்கள் பெற்றோரும் ஒரு வயதில் உங்களைப் போல் இளம் பிராயத்தினரே. ஆகவே அவர்களுக்கு நிச்சயம் உங்களை புரிந்து கொள்ள முடியும்.

நீங்கள் உடலுறவை மேற்கொள்வதற்கு உங்களுக்கு எத்தனை வயது ஆக வேண்டும் என நினைக்கிறீர்களா?

16 வயதிற்கு முதல் உடலுறவில் ஈடுபடுவது சட்ட விரோதனமான செயலாகும். அதே நேரம் 16 வயது வந்தவுடன் உடலுறவை மேற்கொள்ளலாம் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

இள வயதில் உடலுறவை மேற்கொண்டவர்கள் பிற் காலத்தில் தாங்கள் தவறு செய்து விட்டோமே என்று நினைத்து கவலைப்படுவது பலபேருக்கு தோன்றிய ஒன்றாகும். கூடுதலாக இளவயதினர் உடலுறவை மேற்கொள்ளாவிட்டால் தாங்கள் விரும்பும் நபர் தங்களைவிட்டு வேறு ஒருவருடன் சென்று விடுவார் என்று தப்புக் கணக்கு போட்டு இச்செய்கைக்கு உட்படுகிறார்கள். இது மிகவும் ஒரு கேவலமான நகைப்பிற்குரிய விடயமாகும். உடலுறவு என்பது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டபின்பு இருவருக்கிடையே உண்டாகும் ஒரு விசேசமான உறவாகும். ஆகவே அவசரப்படாதீர்கள்.

இதற்கான நேரம் வரும் வரை பொறுத்திருங்கள்.

எனக்கு பருக்கள் அதிகம் ஏற்படுகின்றன. இதற்கு மற்றவர்கள் கூறும் விமர்சனங்கள்; பொறுக்க முடியாமல் இருக்கின்றது. இதற்கு வழி ஏதும் சொல்வீர்களா?

உங்களுக்கு உண்டாகியுள்ள பிரச்சனையை போக்குவதற்கு உங்கள் மருத்துவரை நாடுங்கள். அத்துடன் மற்றவர்களின் விமர்சனங்களை நினைத்து கவலைப்படாதீர்கள். சிலவகை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை 6 கிழமைகளிற்கு தொடர்ந்து எடுப்பதன் மூலமோ அல்லது றோகியுட்டன் என்ற குளிசையை எடுப்பதன் மூலமோ இவற்றை மாற்ற முடியும். ஆகவே மனதை தளரவிடாமல் தைரியமாக வைத்திருங்கள்.

TEENS AND THEIR BURNING QUESTIONS

Question: How can I stop fighting with my mom over every thing?

This is a universal problem. It is also called the ‘generation clash’
The clothes you wear, the food you eat, the colour of your bedroom walls, where you go and how you get there, the people you hang with, what time you go to bed. All lead to conflicts.

What do these things have in common, you're asking? They're just a few examples of the many hundreds of things that your parents decided for you when you were a child. As a kid, you didn't have a say in very much that went on; your parents made decisions about everything from the cereal you ate in the morning to the pajamas you wore at night. And it's a good thing, too - kids need this kind of protection and assistance, because they aren't mature enough to take care of themselves and make careful decisions on their own.

But eventually, kids grow up and become teens. And part of being a teen is developing your own identity - one that is separate from the identities of your parents. It's totally normal for teens to create their own opinions, thoughts, and values about life; it's what prepares them for adulthood.

But as you change and grow into this new person who makes his or her own decisions, your parents may have a difficult time adjusting. They aren't used to the new you yet - they only know you as the kid who had everything decided for you and didn't mind.

In most families, it's this adjustment that can cause a lot of fighting between teens and parents. You want to cover your walls with posters; they don't understand why you don't like your icon on the wall. You think it's OK to come home late after school; they would rather that you play a sport. Clashes like these are very common between teens and parents - teens get angry because they feel parents don't respect them and aren't giving them space to do what they like, and parents get angry because they aren't used to not being in control.

It's easy for feelings to get very hurt when there are conflicts like these. And more complicated issues - like the types of friends you have or your attitudes about sex and partying - can cause even bigger arguments, because your parents will always be intent on protecting you and keeping you safe, no matter how old you are.

The good news about fighting with your parents is that in many families the arguing will lessen as parents get more comfortable with the idea that their teen has a right to certain opinions and an identity that may be different from theirs. It can take several years for parents and teens to adjust to their new roles, though. In the meantime, concentrate on communicating with your parents as best you can.

Sometimes this can feel impossible - like they just don't see your point of view and never will. But talking and expressing your opinions can help you gain more respect from your parents, and you may be able to reach compromises that make everyone happy. For example, if you are willing to clean your room in order to stay out an hour later, both you and your parents walk away with a good deal. Keep in mind, too, that your parents were teens once and that in most cases, they can relate to what you're going through.

Question: How old do you think you have to be to have sex?

It’s illegal to be having sex before the age of 16 in most countries.

But that does not mean you have to start having sex when you are 16. We know that most people who start having sex at a young age often regret it and wish they had waited till they were in a really good loving and trusting relationship. Often young people end up having sex because they think the other person won’t ‘love ‘ them or will go out with someone else if they don’t. This is a silly reason to have sex as sex should be something really special- so wait.

Question: I have bad acne and I am being teased all the time. How can you help me?

I have tried everything on the market and nothing seems to work.

There are other things available to help acne from your doctor. Please do go and discuss the problem with your doctor who won’t tease you. There are various antibiotic pills you can take that might help though you might need to take them for at least 6 weeks before you will know if that particular antibiotic works. If it does not you may need to try a different one or as a last resort some special medicine called roacutane. Don’t give up hope.

http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=60&Itemid=64


நான் பிறருடன் உரையாடும்போது அளவுக்கதிகமாகப் பேசுகிறேனோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும், "இனிமேல் குறைவாகப் பேசவேண்டும்" என்று முடிவு செய்து கொண்டாலும், அடுத்த முறை என்னையறியாமல் நிறையப் பேச ஆரம்பித்துவிடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குறைவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ தவறு செய்வதாக என் உள்மனம் உறுத்துகிறது. இது ஒரு குறையா? அப்படியானால் இதனைப் போக்க என்ன செய்வது?

ம்மில் பலர் உரையாடும்போது அநாவசியமாக நீண்ட நெடிய விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும் தாழ்வு மனப்பான்மை அல்லது பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள்தான். அடிக்கடி எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்ற உந்துதலும் இதனால் ஏற்படுகின்றது என்பர் (நீரிழிவு தவிர இந்த மனப்பான்மையும் ஒரு காரணம்). பேச்சு தவிர எழுதும்போதுகூட அனாவசியமாக தன் கூற்றை உறுதிப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, பத்தி பத்தியாக ஒரே விஷயத்தை எழுதிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் எழுதும் கடிதங்கள் இரண்டு மூன்று பக்கங்கள் ஒரே பாராவாக இருக்கும். முற்றுப் புள்ளியிட இவர்களுக்கு லேசில் மனம் வராது. தாம் கூறுவதை யாராவது நம்பாமலிருந்து விடுவார்களோ என்று இவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையின்மை "நமநம" வென்று அரித்துக் கொண்டிருக்கும். இதே காரணத்தினால், தான் கூறுவது உண்மைதான் என்று நிரூபிக்கும் முகமாக, யாரும் கேட்காமலேயே பலவித சான்றுகளையும் நிரூபணங்களையும் அடுக்கிய வண்ணம் இருப்பர். தான் சும்மா புருடா விடுவதாக அடுத்தவர் எண்ணிவிடக்கூடாதே என்பதற்காக "அங்கே ஒரு வேலைக்காரர் இருந்தார், அவர் பெயர் இராமசாமி. பஸ் சரியாக காலை 10-12க்கு வந்தது. அங்கே தாடி வைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் நின்றான்“. இது போன்ற உப்புப் பெறாத விவரங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருப்பர். அடுத்தவருக்கு இது அலுப்புத் தட்டுமே என்கிற உணர்வு எதுவுமில்லாமல் இதுபோல் செய்வதற்குக் காரணம் தன்னைப் பற்றியே சரியான மதிப்பீடு இன்மைதான்.

என்னுடன் பணியாற்றிய ஒரு பெரிய அதிகாரி தான் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒரு நகலெடுத்து தனியாக ஒரு ஃபைல் செய்து தன் அறையில் வைத்துக் கொள்வார் - அவையெல்லாம் அவர் அதிகாரத்திற்கு உட்பட்ட அலுவலகத்தில்தான் இருக்கும் என்றபோதும் கூட. அது தவிர ஏதாவது மீட்டிங்கில் பங்கெடுப்பதென்றால், தன் உதவியாளர்கள் கொண்ட ஒரு படையையே அழைத்துச் செல்வார். அவர்கள் தங்கள்அலுவலகத்தையே பெயர்த்து எடுத்துச் செல்வதுபோல் ஒரு வண்டி ஃபைல்களை சுமந்துவரச் செய்வார் “ஏதாவது மேல்விவரம் கேட்டால் என்ன செய்வது" என்பார். தன் பெயரைக் கேட்டால்கூட ஒன்றுக்கு இரண்டுமுறை check செய்துவிட்டுத்தான் பதில் சொல்வார் என்பார்கள்! அவ்வளவு தன்னம்பிக்கையின்மை. இவர்கள் "படு பேஜார்" கிராக்கிகள். இதுபோன்ற மேலதிகாரி கிடைப்பதற்கு அவருடைய உதவியாளர்கள் முன்பிறவியில் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு அந்தக் கோயில் சுவற்றிலேயே கையைத் துடைத்துவிட்டுச் சென்றதுபோன்ற பல கொடிய பாவங்களைச் செய்திருக்க வேண்டும் என்பது திண்ணம்!

அளவுக்கதிகமாகப் பேசுவது கண்டிப்பாக ஒரு குறைதான். ஆனால் எது அளவு? எந்த அளவுகோலைக் கொண்டு அதை நிர்ணயிப்பது என்ற கேள்வி நியாயமானது. மேடைப் பேச்சென்றால் "இன்னும் கொஞ்சம் பேசமாட்டானா" என்று பிறர் நினைக்கும் நேரத்தில் முடிக்க வேண்டும் என்பர். அதுபோல் பொதுவாக எப்போதுமே நிறையப் பேசினால் நம் கூற்று மட்டுமில்லாது நம் ஆளுமையும் நீர்த்துப் போகும் அபாயம் இருக்கிறது. நம் இமேஜ் மிகச் சாதாரணத் தோற்றம் கொண்டுவிடும். இதுதவிர, நம் பேச்சு செல்லும் திசையும் நம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஏதேதோ பேசி வம்பில் கொண்டுவிடும் ஆபத்தும் இருக்கிறது. சூழ்நிலையும் நம் கையின் ஆளுமையில் நிற்காது. நாம் சொல்வது மிகச் சாதாரணமானதாக, எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக, ஊடகங்களில் அடிக்கடி தென்படுவதாக இருந்தாலும் கூட, அதனை நீங்கள் பூடகமாக, “எல்லாம் தெரிந்த தோரணையில்", மிகக் குறைந்த சொற்களில், அர்த்தம் தொக்கி நிற்கும்படியாக உரைத்தீர்களானால், அது மிக முக்கியத்துடன் பிறரால் உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

குறைவாகப் பேசுபவர்கள் மேல் எப்போதும் ஏனையோர் தன்னையறியாமல் ஒருவித அச்சம் கலந்த மரியாதையுடன் அணுகுவார்கள். மூடிமறைத்தாற்போல் உரையாடினால்தான் உங்கள்மேல் தொடர்ந்து ஆர்வம் இருக்கும். இது காதலர்களுக்கும் பொருந்தும். அதிகமாகப் பேசப்பேச, ஏதாவது முட்டாள்தனமாகப் பேசிவிட ஏதுவாகும். ஒவ்வொரு சொல்லும் நம் முழுக் கட்டுப்பாட்டுடனும், நம் சிந்தனை அடிப்படையில் முடிவு செய்யப்பட்டும் வந்து விழவேண்டும். அது பாட்டுக்கு லீக்கான குழாய்போல கொட்டக் கூடாது. நாம் சொல்வது சரிதான் என்கிற நம்பிக்கை நமக்கு முழுமையாக இருக்கும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் நிரூபணங்கள் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

நீங்கள் எப்போதும் ஒரு "மூடிய கை" யாகத் தோன்றவேண்டும். எல்லாவற்றையும் எல்லோருக்கும் உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அத்தியாவசியத் தேவையிருந்தாலொழிய விளக்கங்கள் அளிக்கக் கூடாது. திரு. எஸ்.எஸ். இராஜேந்திரன் ஒரு திரைப்படத்தில் "நான் எல்லாத்தையும் ஒடைச்சுத்தான் சொல்லுவேன்" என்று பேசும் ஒரு யதார்த்தவாதியாக வந்து மிகுந்த அல்லல் படுவார். அதற்கு அவருடைய மனைவி, “ஒடைச்சு சொல்லுங்க.பரவாயில்லை. அதுக்காக இப்படி சுக்குநூறா ஒடைக்கணுமா" என்பார்.

நாம் உரையாடும்போது அடுத்தவர் நம்மை எப்போதும் அளவெடுத்துக் கொண்டேயிருப்பர். நம் மனத்தினுள்ளே புகுந்து நம் எண்ணங்களை அகழ்வாராய்ச்சி செய்ய முற்படுவர். நம் எண்ண ஓட்டங்கள் பிறரால் முழுமையாகக் கணிக்கப்படுமேயானால், நம் மேல் அவர்களின் ஆதிக்கம் ஏற்படும். பவர் அவர்கள் கைக்கு ஏறிவிடும். அதனால் பொருள்பொதிந்த சொற்கள் சிலவற்றைப் பேசிவிட்டு நிறுத்திவிட வேண்டும். "இந்த ஆள் என்ன நினைத்துக் கொண்டு இப்படிச் சொல்கிறானோ தெரியவில்லையே" என்று அவனவன் மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டும். நாம் கூறிய ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் நினைத்து ஆராய்ச்சி செய்யச் செய்ய நம் ஆளுமை கூடிக் கொண்டே போகும். சொற்கள் குறைவாகவும் மௌனம் அதிகமாகவும் இருந்தால் பிறரை ஒரு தடுமாற்ற நிலையிலேயே வைக்கலாம். அப்போதுதான் நம் வேலைகளை சுலபமாக சாதித்துக் கொள்ளலாம்.

இதில் இன்னொரு நன்மையும் உள்ளது. நாம் குறைவாகப் பேசி மௌனத்தைக் கடைப்பிடிக்கும்போது ஏனையோர் தங்கள் பேச்சினால் இட்டு நிரப்பத்தலைப்படுவர். இன்னும் சிலர் தன் மேதாவிலாசத்தைக் காண்பிக்க இன்னும் அதிகமாகப் பேசுவர். அவர்கள் அந்தத் தவற்றை செய்யச் செய்ய அவர்கள்பால் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும்.

இதுபோல் உங்களால் பேசப்பட்ட (சிறிது மர்மம் கலந்த) "தொக்கி நிற்கும்" சொற்கள் பலரால் "பாஷ்யம்" எழுதப் பட்டு, பலரால் அவை சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டு, அதனால் மக்கள் மனதில் உங்களப் பற்றிய ஒரு மரியாதை கூடும். பிகாஸோவின் ஓவியங்கள்போல் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலாதவைகளுக்குத்தான் மனித குலம் மதிப்புக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன அறிஞர் ஹன் ஃபை சூ இவ்வாறு கூறுகிறார்:-

"உன்னைச் சுற்றியுள்ளவர்கள் வாயைத் திறக்குமுன் நீ வாயைத்திறவாதே. நீ எவ்வளவு நேரம் உன் உதடுகளையும் நாவையும் கட்டி வைத்திருக்கிறாயோ, அவ்வளவு சீக்கிறம் மற்றவர்கள் தம் வாயைத் திறந்து பேசத் தொடங்கி விடுவர். பிறகு அவர்களின் மனத்தை நீங்கள் முழுமையாகப் படித்து அறியலாம். ஆள்பவன் எப்பொதும் ஒரு புரியாத புதிராகவே இருக்க வேண்டும்."

மோனாலிஸா புன்னகை இவ்வளவு தூரம் எல்லோராலும் பேசப்படும் காரணம் அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். முன்பு சீனத்தின் சர்வாதிகாரியாக இருந்த மாவோ இந்திய தூதரைப் பார்த்து ஒரு அரை மில்லி மீட்டர் சிரிப்பதுபோல் உதட்டைச் சுழித்தார் என்று பத்திரிகைகள் பக்கம்பக்கமாக "இதன் பொருள் மற்றும் வீச்சு சர்வதேச அரசியலில் என்னவாயிருக்கும்" என்று ஹேஷ்யங்களை வெளியிட்டவண்ணம் இருந்தது பலருக்கு நினைவிருக்கும்.

முழுநிலவன்று சிப்பிகள் தங்கள் வாயை அகலத் திறக்கும். அச்சமயம் பார்த்து பெரு நண்டுகள் அவற்றின் வாய்க்குள் ஒரு கல்லைப் போட்டுவிடும். பிறகென்ன? சிப்பியால் தன் வாயை மூட முடியாது. அது அந்த நண்டின் டைனிங் டேபிளுக்கு செல்ல வேண்டியதுதான்! மனிதர்கள் தன் வாயைத் திறந்து பேசிக் கொண்டேயிருந்தால், வாயில் அல்ல, அவர்தம் தலையில் கல்லைப் போட பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு, பொருக்கியெடுத்த முத்துக்களாக நம் சொற்கள் வெளிப்பட நாம் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறர் நம் மனத்தை ஆள்வதிலிருந்துதப்பிக்கலாம். நாமும் இவ்வகிலத்தை ஆளலாம்!

- எஸ்.கே


http://www.tamiloviam.com


ருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையமாக கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதை தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.

முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக, கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவை தவிர்பது நல்லது.
இரண்டாவது எளிமையான முறை, கருமுட்டை கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் அல்லது பெண் செய்து கொள்ளலாம்.
வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகள் மூலம் கரு முட்டையும் கரு அணுவும் இணைந்து கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.
பெண்ணின் கருப்பையில் ஐயுடி பொருத்துவதன் மூலம் கருவளர்வதை தடுக்கலாம்.
கருத்தரித்த பின் கூட குறிப்பிட்ட நாட்களுக்குள் கருச்சிதைவு செய்துகொள்ள இயலும். மாத்திரைகள் மூலம் கூட கருவை கலைக்கலாம்.
மேற் குறிப்பிட்ட கருத்தடை முறைகளை அவர் அவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்ககியத்திற்கு ஏற்றார் போல் கைகொள்ளலாம்.

கருத்தடை முறைகளை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

எந்தெந்த சந்தர்ப்பங்களில் கருத்தரிப்பு நிகழும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
கருத்தடை முறை பாதுகாப்பானதா அல்லது ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்
நீண்டநாள் உபயோகம் செய்யும்போது பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்
அது தாய்பால் அளிப்பதில் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதையும், தாய்பாலில் கருத்தடை மருந்தின் குணங்கள் கலந்து விட வாய்ப்புள்ளதா என்றும் அறியவேண்டும்
பிறக்க இருக்கும் குழந்தையின் உடல்நலத்தை பாதிக்குமா என்பதை அறிதல்
கருத்தடை சாதனம் உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமையை ஏற்படுத்துமா. உதாரணமாக, ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் பிரச்சனைகள்
கருத்தடை சாதனம் தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா

அ. கருத்தடை - இயற்கை முறை

1. ரிதம் (காலண்டர்) முறை
இந்த முறைப்படி, மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்குப் பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சி பருவத்தில், உடலுறவை தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம், மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும்.
இந்த முறையில், பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு, இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

2. பில்லிங்ஸ் முறை
பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சி பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன், இது சற்று குறைந்த அளவில், வறண்டும், கெட்டியாகவும், வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்பு தன்மை கருமுட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும். இந்த மாறுபாடுகளை கவனிக்கும் போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

3. உடலில் வெட்ப மாறுபாடு
பெண்கள் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தில் நடுப்பகுதியில் கண்காணித்தில் வேண்டும். அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும் போது, உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்உறீட் அதிகமாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவை தவிர்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையை தெரிந்து கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆ. தடுப்பு முறை (கரு முட்டை கரு அணு இணைவதை தடுக்கும் முறை)

ஆண்கள் அணியும் ஆணுறை
ஆண்கள் அணியும் ஆணுறை உடலுறவிற்கு முன்பு அணிந்து கொள்வதன் மூலம், கரு அணு கர்பப்பபையில் கருமுட்டையுடன் இணைவதை தடுத்து கருத்தரிப்பை தவிர்க்க இயலும். ஒரு முறை உபயோகித்த ஆணுறையை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படுவதுடன் எய்ட்ஸ் மற்றும் உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க இயலும்.

டயாபர்ம் பெண்களுக்கான கருத்தடை சாதனம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களுக்கான கருத்தடை சாதனம் 2-4 இன்ச் வட்டவடிவில் ஒரு ரிங் இணைக்கப்பட்ட பொருளாகும். இதை ஆரம்பக்கட்டத்தில் ஒரு மருத்துவரின் அல்லது ஒரு மருத்துவ ஊழியரின் உதவியுடன் பொருத்திக் கொள்ள பழகி விட்டால் பின் சுயமாகவே பெண் உடலுறுப்பில் பொறுத்திக் கொள்ள இயலும். இதை அணிவதன் மூலம் கரு அணு கரு முட்டை இணைவதை தடுத்து கருதரிப்பை தவிர்க்க இயலும். ஒருமுறை உபயோகித்தப்பின் அதை சோப்பு போட்டு சுத்தப்படுத்தி மீண்டும் அடுத்த முறை உபயோகம் செய்யலாம். இதன் விலை சற்றே அதிகமானாலும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெண்களுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது.

சர்விகல் கேப்
இது டயாபர்ம் போன்றே சர்விக்ஸ்-ல் பொருத்தி கொள்ள கூடிய ஒரு ரப்பர் கேப். இதை அணிந்து கொள்வதன் மூலம் சர்விக்ஸின் திறப்பு மூடப்படுவதால் கருத்தரிப்பு நிகழ்வு தடைப்படுகிறது.

பெண்களுக்கான கருத்தடை பொருள்
பெண்களுக்கான இந்த கருத்தடைப் பொருள், பாலியுரித்தனால் செய்யப்பட்ட மெதுவான, பெண்களின் உடலுருப்பில் பொருத்திக்கொள்ள கூடிய வசதியுடன் உள்ள ஒன்றாகும். உடலுறவிற்கு முன்பே இதை பொருத்திக் கொள்வதன் மூலம் கரு அணு கரு முட்டையுடன் இணைவதை தவிர்கலாம். இது கருத்தரிப்பை தவிர்ப்பதுடன், எய்ட்ஸ் மற்றும் உடலுறவின் மூலம் ஏற்படும் நோய்களை தடுக்கவும் இயலும். ஆனால் சற்றே விலை அதிகமானது.

ஸ்பெர்மிசைடு
ஸ்பெர்மிசைடு என்பது பெண் உறுப்பில் தடவிக்கொள்ளும் ஒரு ரசாயன பொருளாகும். இது கரு அணுவை செயலிழக்கச் செய்வதால் கருத்தரிப்பை தடை செய்ய இயலும். இது மெதுவான நுரை வடிவத்திலும், மாத்திரைகள், கிரீம் வடிவத்தில் உள்ளது. இதன் பக்க விளைவுகள் கூட மிகக் குறைவே. ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை விளைவுகளை கொடுக்கலாம்.

நடைமுறை வழக்கத்தில் உள்ள கருத்தடை முறை

தாய்பால் அளிப்பது
குழந்தை பிறந்த பின் ஒருசில மாதங்களுக்கு கருமுட்டை வளர்வது, மீண்டும் மாதவிடாய் ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட சற்றே தாமதம் ஏற்படும். தாய்பால் அளிக்கும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் கருத்தரிப்பை தள்ளி போட இயலும்.

கருத்தடுப்பு சாதனங்கள்

ஐயுடி
ஐயுடி என்பது சிறிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு கர்ப்பபையில் பொருத்திக் கொள்ளப்படும் ஒரு கருத்தடை சாதனம் ஆகும். கர்ப்பப்பையில் உள்ள இந்த பொருள் கருத்தரிப்பை தடை செய்து கரு அணுவும் கரு முட்டையும் இணைந்து வளர்வதை தடை செய்கிறது.
நம் தேசத்தில் புழக்கத்தில் உள்ள இந்த கருத்தடை பொருளின் பெயர் காப்பர் டி. இது பொருத்தப்பட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் மாற்றப்படவேண்டும். இது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ளபட வேண்டிய ஒன்று. ஆனால் இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக கருதப்படுகிறது. ஆனாலும் இதில் ஒருசில பக்க விளைவுகள் உள்ளது.

பொருத்தப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வலி ஏற்படுகிறது
மாதவிடாயின்போது அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது
மிக அறிதாக கர்ப்பபையின் உள்சுவர் தோலில் பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் போது, அதை நீக்கும் நேரத்தில் வலி ஏற்படலாம்.
ஐயுடி பொருத்திக் கொள்வதால் கர்ப்பப்பையில் வெளிப்புறத்தில் முக்கியமாக பெல்லோபியன் டியுபில் கரு வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் இன்பெக்ஷன் ஏற்பட்டு சரியான மருத்துவ வசதி இல்லாத போது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட நேரிடலாம்

ஸ்டிராய்டு அல்லாத மாத்திரைகள்
இந்த மாத்திரைகளும் கருத்தரிப்பை தடுக்க உதவும்.

ஹார்மோன் முறைகள்

ஹார்மோன் முறைகள்
ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் முறையில், ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் உடலில் மாற்றப்படுவதால் கரு வளர்ச்சியையும் கரு அணு வளர்ச்சியையும் தடுக்கப்படுகிறது. மேலும் இது சர்விகல் சுவரை அடர்த்தியாக செய்வதால் கரு அணு கர்ப்பபைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால் இம்முறையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் கருத்தடை மருந்துகள்
ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் கலந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஒவரியில் வளரும் கருமுட்டைகளை வளரவிடாமல் தடுப்பதால் கருத்தரிப்பு ஏற்படாமல் தடுக்க இயலும். மாலா டி குறைந்த வீரியம் உள்ள பாதுகாப்பான கருத்தடை மருந்தாகும்.

ப்ரோஐஸ்ட்ரோன் மட்டும் உள்ள மருந்துகள்
ப்ரோஐஸ்ட்ரோன் மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்ளும்போது, சர்விகல் ம்யுகஸ் அதிகமாக்கியும், கரு அணு கரு முட்டை நகர்வதை குறைத்தும், கரு வளர்வதை தடுக்கிறது. ஆனால் இம்முறையில் உடல் நலத்தில் பக்க விளைவுகள் உள்ளது.

அவசரகால கருத்தடை மாத்திரைகள்
பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இத்தகைய கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிப்பை தவிர்கலாம். இதன் பக்க விளைவுகளாக, வாந்தி அடுத்த மாதவிடாய் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் இந்த முறை 100 % நம்பகமானதல்ல.

நிரந்தர கருத்தடை முறைகள்

நிரந்தரமாக செய்து கொள்ளும் இந்த முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்து செல்லும் குழாயை தடுப்பது அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப்படுகிறது. இம்முறையில், தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்றபோதே செய்து கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை
வாசக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல். இந்த அறுவை சிகிச்சையை செய்வதன் மூலம் கரு அணு செல்வது தடைபடுவதால், பெண்கள் கருத்தரிப்பதை தவிர்க்கலாம். ஆனால் அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாரம் வரையில் அதிக பளுவுள்ள பொருட்களை தூக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்கு பின் வீக்கம், வலி, ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பெண்களுக்கான நிரந்தர கருத்தடை
இந்த முறையில், பெண்களின் பிறப்புறுப்பில் செய்யும் சிறிய அறுவை சிகிச்சையால், ஒவரியில் வளரும் கருமுட்டை கரு அணுவுடன் இணைவது தடுப்கப்படுகிறது. சரியான முறையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை முறை சிறந்த கருத்தடை முறையாகும். ஒரு சில நேரங்களில் இன்பெக்ஷன், ரத்தக்கசிவு ஏற்படலாம். அதிக வலி மற்றும் உதிரம் போக்கு இருக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வும், 2-3 நாட்களுக்கு அதிகபளுவோ தூக்கக் கூடாது.

கருச்சிதைவு
கருச்சிதைவு என்பது கரு முழுமையான வளர்ச்சி அடைவதற்கு முன்பே செய்யப்படுவது. ஒரு சிலருக்கு இயற்கையாகவே கருச்சிதைவு ஏற்படும். மருத்துவ வசதியை உபயோகித்து கருவை கலைக்க இயலும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் ஏற்படும் கருவை கலைப்பதற்கு இம்முறை கையாளப்பகிறது. மருத்துவ முறையில் செய்யப்படும் கருச்சிதைவுக்கு 1972ம் ஆண்டு சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டது. கரு வளர்ச்சியின் தன்மை அல்லது நாட்களுக்கு ஏற்ப வெவ்வேறு கருச்சிதைவு முறைகள் கையாளப்படுகிறது.

சக்ஷன்
இந்த முறையை 6ல் இருந்து 8 வாரம் வரை வளர்ந்த கருவை கலைப்பதற்கு உபயோகிக்கின்றார்கள். இது, லோக்கல் அல்லது பொது அனஸ்தீஸியா அளித்த பின் வளர்ந்த கருவை உறிஞ்சி எடுத்து விடுவதாகும். இதற்காக மருத்துவ மனையில் தங்குவது அவசியம் இல்லை.

டி-சி
இந்த முறையில் 8ல் இருந்து 16 வாரங்கள் வரை வளர்ந்த கருவை ஒரு கம்பி மூலம் கலைத்து பின் கர்ப்ப பையை சுத்தம் செய்து விடுதலாகும்.

கருவை வெளியே வரவைக்கும் முறை
16-20 வாரம் வளர்ந்த கருவை, மருந்துகளை உபயோகித்து வெளியே வரவைப்பதாகும். இம்முறை அனீஸ்தீஸியா அளித்து செய்யப்படும். இதற்காக மருத்துவமனையில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்க வேண்டி வரும்

கருச்சிதைவு மாத்திரைகள்
கருச்சிதைவு மாத்திரைகள் உபயோகிப்பதன் மூலம் 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை வளர்ந்த கருவை கலைக்க இயலும். ஆனால் இதில் பக்க விளைவுகள் சற்று அதிகம். இம்முறையில் மிக அதிகமான உதிரப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படலாம்.

http://www.indg.in/health/womenhealth/b95bb0bc1ba4bcdba4b9fbc8