"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


மரணம்!
ஒரு நிகழ்வு.
ஓவ்வொரு கணமும் நடைபெறுகின்றது.
நாம் எதிர்கொள்கின்றோமோ? இல்லையோ?
நாம் அதைக் கவனிக்கின்றோமோ? இல்லையோ?
அது நம்முடன் இருக்கின்றது. வாழ்கின்றது.
நம் மூச்சைப்போல..

மூச்சை உள்ளெடுக்கின்றது முதல் முறை…
ஒரு குழந்தை பிறக்கும் பொழுது…
இதுவே வாழ்வின் ஆரம்பம்…
ஒரு நாள் வயது சென்று இறக்கின்றது.
இதுவே வாழ்வின் முடிவு…
மூச்சை வெளியே விடுகின்றது இறுதியாக…

மூச்சை உள்ளேயெடுக்கும் ஒவ்வொரு கணமும்
பிறப்பு நடைபெறுகின்றது.
மூச்சை வெளியேவிடும் ஒவ்வொரு கணமும்
மரணம் நடைபெறுகின்றது. ஆகவே
ஒன்றை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
மரணம் என்பது எதிர்காலத்தில் நடைபெறப்போகும் ஒன்றல்ல.
நமக்காக காத்துக்கொண்டிருக்கவில்லை.
மரணம் வாழ்க்கையின் ஒரு பகுதி.
இக் கணம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
ஒரு நிகழ்வு.

வாழ்வும் இறப்பும்
இயற்கையின் இரு பரிமாணங்கள்.
மரணமும் வாழ்க்கையும் இரு சிறகுகள்.
ஓன்று இல்லாமல் மற்றது இல்லை.
ஒரே நேரத்தில் ஒன்றாக நடைபெறுகின்ற ஒன்று.
மரணம் வாழ்க்கைக்கு எதிரானதல்ல.
மரணமின்றி வாழ்க்கை சாத்தியமே இல்லை.
மரணத்தின் அடித்தளத்தில்தான்
வாழ்க்கை இருக்கின்றது.

இறப்பு என்பது என்ன?
இது தொடர்பாக நாம் சரியான புரிதலைக் கொண்டிருக்கவேண்டும்.
மரணம் வாழ்க்கையின் எதிரி அல்ல. நண்பர்.
நாம் பிறந்ததிலிருந்து நம்முடன் வாழ்கின்றது.
நம்மிலிருந்து வெளிச் செல்லும்
ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு சிறிய மரணம்.
நம் பயம் காரணமாக
மரணத்தை எதிர்காலத்தில்
கொண்டு சென்று வைத்துள்ளோம்.

மனம் தன்னால் புரிந்து கொள்ளமுடியாத விடயங்களை தவிர்த்துவிடும்.
மூன்று விடயங்கள் மனதிற்கு அப்பாற்பட்டது.
மனதால் புரிந்து கொள்ளமுடியாதது.
வாழ்க்கை, காதல், மரணம் என்பன…
வாழ்க்கை என்னவென்று தெரியாமலே
வாழ்க்கையை ஏற்றுகொள்கின்றது மனம்!.
மரணத்தை ஏற்றுக்கொள்வது என்பது
மனதிற்கு தொடர்ச்சியான ஒரு பிரச்சனை.
ஆகவே மரணத்தை எதிர்காலத்திற்கு தள்ளிவைத்துவிட்டது.
வரும் பொழுது எதிர்கொள்ளலாம் என்றிருக்கின்றது.

காதலுக்கு பல விடயங்களை பதிலீடாக
மனம் உருவாக்கியுள்ளது.
ஓன்றின் மீதான பற்றை (Possiveness)
நாம் காதல் என சிலவேளைகளில் கூறுவோம்.
அல்லது ஒன்றுடனான நெருக்கத்தை (Attachment)
நாம் காதல் எனக் கூறுவோம்.
சிலவேளைகளில் ஆதிக்கத்தையும் (Power)
நாம் காதல் எனக் கூறுவோம் –
இவை எல்லாம் தன்முனைப்பின் (Ego) விளையாட்டுக்கள்.
இவற்றுடன் காதலுக்கு ஒரு தொடர்பும் இல்லை.
உண்மையில் இவற்றினால் தான்
காதல் சாத்தியமே இல்லாதிருக்கின்றது.

வாழ்வும் மரணமும் இரு கரைகள் போன்றது.
இவற்றுக்கு இடையில் காதல் எனும்
நதி பாய்வதற்கு சாத்தியமுள்ளது.
ஆனால் இது ஒரு “சாத்தியம்” மட்டுமே.

மரணத்தைப் புரிந்துகொள்வோமானால்
மரணத்திலிருந்து நம்மைப் பாதுபகாப்பது தொடர்பாக
சிந்திக்கவே தேவையில்லை.
மரணம் நம்மைக் கொலை செய்யவில்லை.
நாம் வாழும் பொழுது
நமக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்
ஒரு நிகழ்வே மரணம்,
வாழ்வு இதனால் அழிக்கப்படவில்லை.
மாறாக ஒவ்வொரு கணமும்
வாழ்வு புதிதாகப் பிறக்கின்றது.
பழைய மலர்கள் ஊதிர
புதிய மலர்கள் தோன்றுகின்றன.
ஒவ்வொரு கணமும்
நாம் இறந்து மறுபிறப்பு எடுக்கின்றோம்.
ஒவ்வொரு கணமும் பழையது மறைந்து
புதியது நம்மில் பிறக்கின்றது.
இது ஒரு தொடர்ச்சியான அதிசயம்.

புரியவேண்டிய இரண்டாவது விடயம்…
மரணம் என்பது நிச்சயமானது.
மற்றவை எல்லாம் நிச்சயமற்றவை.
மற்றவை நடக்கலாம். நடக்காமலும் விடலாம்.
ஆனால் நாம் பிறந்தபோதே
மரணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
இதைப் புரிந்துகொண்டோமானால்
நாம் நிம்மதியாக இருக்கலாம்.
அமைதியாக கவலையின்றி வாழலாம்.
நிச்சமற்ற தன்மையினால் தான்
கவலை வருகின்றது.
மரணம்!
நிச்சயமானது என்பதை ஏற்றுக்கொள்வோமாயின்
அமைதியான மரணம்
ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.
கண்களைத் திறந்து
உங்கள் இறப்பையும் பிறப்பையும் கவனியுங்கள்.
பிரக்ஞையுடன் கவனியுங்கள்.
தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒருவர் தன் வாழ்வை
முழுமையாக வாழ்வாராயின்
மரணத்தைக் கண்டு பயங்கொள்ளமாட்டார்.
மரணத்தை அழைப்பீர்கள்.

http://www.fixbuy.com/awareness/tamil


ருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்லை.
இதுவே நாம் அறியாதது.

தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்வது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

தியானம்!

நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது. அமைதி நம்மில் நிலவுவதற்கான ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும். எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது. கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது. உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம். இந்த உலகத்திலையே இருப்போம். ஆனால்; நடைபெறும் அனைத்தையும் ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு அழாகான விளையாட்டாக ... மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்வோம். விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.

நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பலஉள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றைஅடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது. டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல், டைனமிக் தியானம், நம் கடந்த காலத்தை, நாம் அடக்கிய உணர்ச்சிகளை, நாம் அடக்கிய உணர்வுகளை வெடிக்கச் செய்து படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.

நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால்; பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும். இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது. இதன் பின் மனதை அமைதியாக்குவது. நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்து கொண்டே நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான். உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது. ஆனால்; உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால் மனதையும் வழிநடத்தலாம். மனம் அமைதி ஆக இருக்குமாயின் அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.

நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை. ஆனால்; நம்பிக்கையுடன் இதயத்தை அணுகினால் இதையும் அமைதியாக்குவது சாத்தியம். இதன்பின் நம் மையத்திற்கு அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம். இங்கு அமைதியாக இருக்கலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும் பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.

முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர. மனிதர் இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்து கொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம். மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.

ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள். மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நுனியைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள். இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது. இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார். புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை. உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை! அனைத்தும் அறிந்த நிலை.

எதையும் துறக்காமல் உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல் நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய தினந்தோறும் தியானம் செய்வோம்.

ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில் இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது. ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின், பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார். இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.

சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.

தியான முறைகள் படகுகள் போல ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே தியான நிலையை அடைவதற்கான பேரின்பத்தை அனுபவிப்பதற்கான ஒரு ஊடகம். ஒரு பாதை. மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும் இவர் வழிகாட்டும் பாதை இது. தேடுங்கள்! உங்கள் உள்ளே! தியானப்பயிற்சியே ஒசோவின் வழிமுறை.

ஓசோவின் புத்தகங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமே. பயணிக்கவேண்டியது நாம்.

http://www.fixbuy.com/awareness/tamil


ளிமண்ணைத் தண்ணீர் பக்குவப்படுத்துகிறது. என் உள்ளத்தைக் கண்ணீர் பக்குவப்படுத்துவதாகுக.

மண்ணில் விளைவை உண்டுபண்ண மழை பெய்கிறது. துன்பக் கண்ணீர் உள்ளத்தைத் திருத்திச் செப்பனிடுகிறது. கார்மேகம் சூழ்வது பூமியைக் குளிரச் செய்வதற்காக. நனைந்து குளிர்ந்த பூமியினின்று விதை முளைக்கிறது. துயரம் என்னும் மேகத்திலும் மழையிலும் மூடப்பெற்ற உள்ளம் ஞான விளைவுக்கு ஏற்றதாகிறது. விசாரம் உள்ளத்தை உழுகிறது. துன்பம் அதை மிருதுவாக்குகிறது. பின்பு ஞானோதயம் உண்டாகிறது.

துன்பக்கண் ணீரில் துளைந்தேற்குன் ஆனந்த
இன்பக்கண் ணீர்வருவது எந்நாள் பராபரமே.

-தாயுமானவர்