"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


ஸென் துறவி ஒருவர், போகும் இடமெல்லாம் தன்னுடன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி எடுத்துச் சென்றார். துறவியின் இந்தச்செயலைக்கண்ட மடாதிபதி. துறவி எதற்காகத் தன்னுடைய புற அழகைப் பற்றி கவலைப் படவேண்டும். அக அழகே சாதுக்களுக்கு அழகு. எந்த நேரமும் துறவியானவன் தன்னைப் பற்றிய சிந்தனையிருந்தால் எப்பொழுது ஞானத்தை அடைவது?" என மனதில் கேள்வி தோன்றியது?

மடாதிபதி, நீ எதற்காக கண்ணாடியினை கையில் எடுத்துக் கொண்டு அலைகிறாய்? எனத் துறவியிடம் கேட்டார். துறவி கண்ணாடியை கைப்பைலிருந்து வெளியே எடுத்து மடாதிபதியின் முகத்திற்கு நேராகக் காட்டியவர், "எனக்கு எதாவது பிரச்சனை வரும் போது இந்தக் கண்ணாடியில் என் முகம் பார்ப்பேன். அது என்னுடைய இன்னலுக்கான காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்" எனக் கூறியவுடன் மடாதிபதி வாயடைத்து போனார்.