"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


மரணம்!
ஒரு நிகழ்வு.
ஓவ்வொரு கணமும் நடைபெறுகின்றது.
நாம் எதிர்கொள்கின்றோமோ? இல்லையோ?
நாம் அதைக் கவனிக்கின்றோமோ? இல்லையோ?
அது நம்முடன் இருக்கின்றது. வாழ்கின்றது.
நம் மூச்சைப்போல..

மூச்சை உள்ளெடுக்கின்றது முதல் முறை…
ஒரு குழந்தை பிறக்கும் பொழுது…
இதுவே வாழ்வின் ஆரம்பம்…
ஒரு நாள் வயது சென்று இறக்கின்றது.
இதுவே வாழ்வின் முடிவு…
மூச்சை வெளியே விடுகின்றது இறுதியாக…

மூச்சை உள்ளேயெடுக்கும் ஒவ்வொரு கணமும்
பிறப்பு நடைபெறுகின்றது.
மூச்சை வெளியேவிடும் ஒவ்வொரு கணமும்
மரணம் நடைபெறுகின்றது. ஆகவே
ஒன்றை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
மரணம் என்பது எதிர்காலத்தில் நடைபெறப்போகும் ஒன்றல்ல.
நமக்காக காத்துக்கொண்டிருக்கவில்லை.
மரணம் வாழ்க்கையின் ஒரு பகுதி.
இக் கணம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
ஒரு நிகழ்வு.

வாழ்வும் இறப்பும்
இயற்கையின் இரு பரிமாணங்கள்.
மரணமும் வாழ்க்கையும் இரு சிறகுகள்.
ஓன்று இல்லாமல் மற்றது இல்லை.
ஒரே நேரத்தில் ஒன்றாக நடைபெறுகின்ற ஒன்று.
மரணம் வாழ்க்கைக்கு எதிரானதல்ல.
மரணமின்றி வாழ்க்கை சாத்தியமே இல்லை.
மரணத்தின் அடித்தளத்தில்தான்
வாழ்க்கை இருக்கின்றது.

இறப்பு என்பது என்ன?
இது தொடர்பாக நாம் சரியான புரிதலைக் கொண்டிருக்கவேண்டும்.
மரணம் வாழ்க்கையின் எதிரி அல்ல. நண்பர்.
நாம் பிறந்ததிலிருந்து நம்முடன் வாழ்கின்றது.
நம்மிலிருந்து வெளிச் செல்லும்
ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு சிறிய மரணம்.
நம் பயம் காரணமாக
மரணத்தை எதிர்காலத்தில்
கொண்டு சென்று வைத்துள்ளோம்.

மனம் தன்னால் புரிந்து கொள்ளமுடியாத விடயங்களை தவிர்த்துவிடும்.
மூன்று விடயங்கள் மனதிற்கு அப்பாற்பட்டது.
மனதால் புரிந்து கொள்ளமுடியாதது.
வாழ்க்கை, காதல், மரணம் என்பன…
வாழ்க்கை என்னவென்று தெரியாமலே
வாழ்க்கையை ஏற்றுகொள்கின்றது மனம்!.
மரணத்தை ஏற்றுக்கொள்வது என்பது
மனதிற்கு தொடர்ச்சியான ஒரு பிரச்சனை.
ஆகவே மரணத்தை எதிர்காலத்திற்கு தள்ளிவைத்துவிட்டது.
வரும் பொழுது எதிர்கொள்ளலாம் என்றிருக்கின்றது.

காதலுக்கு பல விடயங்களை பதிலீடாக
மனம் உருவாக்கியுள்ளது.
ஓன்றின் மீதான பற்றை (Possiveness)
நாம் காதல் என சிலவேளைகளில் கூறுவோம்.
அல்லது ஒன்றுடனான நெருக்கத்தை (Attachment)
நாம் காதல் எனக் கூறுவோம்.
சிலவேளைகளில் ஆதிக்கத்தையும் (Power)
நாம் காதல் எனக் கூறுவோம் –
இவை எல்லாம் தன்முனைப்பின் (Ego) விளையாட்டுக்கள்.
இவற்றுடன் காதலுக்கு ஒரு தொடர்பும் இல்லை.
உண்மையில் இவற்றினால் தான்
காதல் சாத்தியமே இல்லாதிருக்கின்றது.

வாழ்வும் மரணமும் இரு கரைகள் போன்றது.
இவற்றுக்கு இடையில் காதல் எனும்
நதி பாய்வதற்கு சாத்தியமுள்ளது.
ஆனால் இது ஒரு “சாத்தியம்” மட்டுமே.

மரணத்தைப் புரிந்துகொள்வோமானால்
மரணத்திலிருந்து நம்மைப் பாதுபகாப்பது தொடர்பாக
சிந்திக்கவே தேவையில்லை.
மரணம் நம்மைக் கொலை செய்யவில்லை.
நாம் வாழும் பொழுது
நமக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்
ஒரு நிகழ்வே மரணம்,
வாழ்வு இதனால் அழிக்கப்படவில்லை.
மாறாக ஒவ்வொரு கணமும்
வாழ்வு புதிதாகப் பிறக்கின்றது.
பழைய மலர்கள் ஊதிர
புதிய மலர்கள் தோன்றுகின்றன.
ஒவ்வொரு கணமும்
நாம் இறந்து மறுபிறப்பு எடுக்கின்றோம்.
ஒவ்வொரு கணமும் பழையது மறைந்து
புதியது நம்மில் பிறக்கின்றது.
இது ஒரு தொடர்ச்சியான அதிசயம்.

புரியவேண்டிய இரண்டாவது விடயம்…
மரணம் என்பது நிச்சயமானது.
மற்றவை எல்லாம் நிச்சயமற்றவை.
மற்றவை நடக்கலாம். நடக்காமலும் விடலாம்.
ஆனால் நாம் பிறந்தபோதே
மரணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
இதைப் புரிந்துகொண்டோமானால்
நாம் நிம்மதியாக இருக்கலாம்.
அமைதியாக கவலையின்றி வாழலாம்.
நிச்சமற்ற தன்மையினால் தான்
கவலை வருகின்றது.
மரணம்!
நிச்சயமானது என்பதை ஏற்றுக்கொள்வோமாயின்
அமைதியான மரணம்
ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.
கண்களைத் திறந்து
உங்கள் இறப்பையும் பிறப்பையும் கவனியுங்கள்.
பிரக்ஞையுடன் கவனியுங்கள்.
தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒருவர் தன் வாழ்வை
முழுமையாக வாழ்வாராயின்
மரணத்தைக் கண்டு பயங்கொள்ளமாட்டார்.
மரணத்தை அழைப்பீர்கள்.

http://www.fixbuy.com/awareness/tamil


ருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்லை.
இதுவே நாம் அறியாதது.

தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்வது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

தியானம்!

நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது. அமைதி நம்மில் நிலவுவதற்கான ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும். எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது. கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது. உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம். இந்த உலகத்திலையே இருப்போம். ஆனால்; நடைபெறும் அனைத்தையும் ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு அழாகான விளையாட்டாக ... மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்வோம். விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.

நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பலஉள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றைஅடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது. டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல், டைனமிக் தியானம், நம் கடந்த காலத்தை, நாம் அடக்கிய உணர்ச்சிகளை, நாம் அடக்கிய உணர்வுகளை வெடிக்கச் செய்து படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.

நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால்; பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும். இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது. இதன் பின் மனதை அமைதியாக்குவது. நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்து கொண்டே நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான். உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது. ஆனால்; உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால் மனதையும் வழிநடத்தலாம். மனம் அமைதி ஆக இருக்குமாயின் அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.

நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை. ஆனால்; நம்பிக்கையுடன் இதயத்தை அணுகினால் இதையும் அமைதியாக்குவது சாத்தியம். இதன்பின் நம் மையத்திற்கு அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம். இங்கு அமைதியாக இருக்கலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும் பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.

முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர. மனிதர் இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்து கொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம். மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.

ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள். மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நுனியைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள். இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது. இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார். புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை. உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை! அனைத்தும் அறிந்த நிலை.

எதையும் துறக்காமல் உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல் நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய தினந்தோறும் தியானம் செய்வோம்.

ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில் இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது. ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின், பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார். இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.

சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.

தியான முறைகள் படகுகள் போல ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே தியான நிலையை அடைவதற்கான பேரின்பத்தை அனுபவிப்பதற்கான ஒரு ஊடகம். ஒரு பாதை. மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும் இவர் வழிகாட்டும் பாதை இது. தேடுங்கள்! உங்கள் உள்ளே! தியானப்பயிற்சியே ஒசோவின் வழிமுறை.

ஓசோவின் புத்தகங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமே. பயணிக்கவேண்டியது நாம்.

http://www.fixbuy.com/awareness/tamil


ளிமண்ணைத் தண்ணீர் பக்குவப்படுத்துகிறது. என் உள்ளத்தைக் கண்ணீர் பக்குவப்படுத்துவதாகுக.

மண்ணில் விளைவை உண்டுபண்ண மழை பெய்கிறது. துன்பக் கண்ணீர் உள்ளத்தைத் திருத்திச் செப்பனிடுகிறது. கார்மேகம் சூழ்வது பூமியைக் குளிரச் செய்வதற்காக. நனைந்து குளிர்ந்த பூமியினின்று விதை முளைக்கிறது. துயரம் என்னும் மேகத்திலும் மழையிலும் மூடப்பெற்ற உள்ளம் ஞான விளைவுக்கு ஏற்றதாகிறது. விசாரம் உள்ளத்தை உழுகிறது. துன்பம் அதை மிருதுவாக்குகிறது. பின்பு ஞானோதயம் உண்டாகிறது.

துன்பக்கண் ணீரில் துளைந்தேற்குன் ஆனந்த
இன்பக்கண் ணீர்வருவது எந்நாள் பராபரமே.

-தாயுமானவர்


சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுகபேரலை.

சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.

சுனாமி எப்படி உருவாகிறது?

பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.

எப்படியெல்லாம் வரும் சுனாமி?

1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.

சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது எப்போது?

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.

2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.

சுனாமி எச்சரிக்கை அமைப்பு:

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.

அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி'.

1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்:

கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.

இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.

நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

http://www.kalanjiam.com /  


நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததினால் ஏற்படுகிறது. இவ்வகை நோய்கள் அனைத்தையும் உடலை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள பழகுவதின் மூலம் ஏற்படாமல் தடுக்கலாம்.

தலையை (சிரசு) சுத்தம் செய்தல்

வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஷாம்பு அல்லது சீக்காய் உபயோகப்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

கண், காது மற்றும் மூக்கை சுத்தம் செய்தல்

சுத்தமான தண்ணீரை கொண்டு தினமும் கண்களை (கழுவவேண்டும்) சுத்தம் செய்ய வேண்டும்.

காதுகளில் குறும்பி (வாக்ஸ்) எனப்படும் பொருள் உருவாகி காற்று செல்லும் வழியினை அடைக்கிறது. இது வலியை ஏற்படுத்தும். எனவே காதுகளை பஞ்சு கொண்டு வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

மூக்கில் காணப்படும் சளி போன்ற திரவம் காய்வதினால் ஏற்படும் பொருள் மூக்கு துவாரத்தை அடைத்துக் கொள்ளும். எனேவ தேவைப்படும் போதெல்லாம் மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும். சிறுபிள்ளைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷம் ஏற்படும் போது மென்மையான துணியினைப் பயன்படுத்தி மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.

வாயினை சுத்தம் செய்தல்

மென்மையான பல்பொடி மற்றும் பேஸ்ட் போன்றவை பற்களை சுத்தம் செய்வதற்கு உகந்தவைகள். தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன் என இரண்டு வேலை பற்களை சுத்தம் செய்யவும். கரித்தூள், உப்பு, கரட்டுத்தன்மை கொண்ட பற்பொடி இதுபோன்ற பிற பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்யும்போது பற்களின் வெளிப்படலத்தில் கீறல்கள் ஏற்படுத்தும்.

எந்தவொரு உணவுபொருளையும் உட்கொண்ட பின்னர் சுத்தமான தண்ணீரைக் கொண்டு வாயினை கழுவவேண்டும். இவ்வாறு செய்வது, உணவுப் பொருள் பற்களின் இடையில் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவது, பல்ஈறுகளை கெடுப்பது மற்றும் பல்சொத்தை (அ) பற்சிதைவு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.

சத்தான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்புப் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற உணவுகளை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

பற்சிதைவிற்கான அறிகுறிகள் காணும்போது பல்மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.

முறையாக மற்றும் சரியாக பல் துலக்கும் முறைகள் பற்களில் கறை படிவதை தடுக்க உதவுகிறது. பற்களை சுத்தம் செய்ய பல்மருத்துவரை அணுகவும்.

தோல் பராமரிப்பு

தோல் உடலை முழுவதும் மூடியுள்ளது. இது உடல் உறுப்புகளை பாதுகாக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தோல் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வியர்வையாக வெளியேற்ற உதவுகிறது. தோலில் குறைபாடு இருப்பின் வியர்வை சுரப்பிகள் அடைபடுகிறது. இதன் விளைவாக புண்கள் (சோர்ஸ்) மற்றும் பருக்கள் (அக்கி) போன்றவைகள் ஏற்படுகின்றன.

தோலை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் சுத்தமான தண்ணீர் மற்றும் சோப்பினை கொண்டு குளிக்க வேண்டும்.

கைகளைக் கழுவுதல்

உணவு உட்கொள்வது, மலம் கழித்தபின் மலவாயினை சுத்தம் செய்வது, மூக்கினை சுத்தம் செய்வது, மாட்டுச்சாணம் அள்ளுவது போன்ற எல்லா செயல்களையும் நாம் கைகளைக் கொண்டு செய்கிறோம். இதுபோன்று செய்யும் போது, பல நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நகங்களின் கீழ் மற்றும் தோலின் மேற்பரப்பில் தங்கியிருக்கும். இதுபோன்ற செயல்களுக்குப் பின், மிகமுக்கியமாக சமைப்பதற்கு முன், கைகளை (கை மணிக்கட்டிற்கு மேல், விரல் இடுக்குகள் மற்றும் நகச்சந்துகள்) சோப்பு கொண்டு கழுவுவது, பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது.

நகங்களை முறையாக வெட்ட வேண்டும். நகங்களை கடிப்பது மற்றும் மூக்கை நோண்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பிள்ளைகள் மண்ணில் விளையாடுவர் எனவே உணவிற்கு முன் கைகளைக் கழுவ கற்பிக்க வேண்டும்.

இரத்தம், மலம், சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவற்றை தொடுவதை தவிர்க்கவும்.

மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது சுத்தம் செய்தல்

மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் உறுப்புகளை சுத்தமான நீரைக் கொண்டு முன்னிருந்து பின்னாக சுத்தம் செய்தல் வேண்டும். கைகளை சோப்பினை கொண்டு கழுவ மறந்து விடக்கூடாது. கழிவறை, குளியலறை மற்றும் சுற்றுப்புறத்தை துப்புரவாக வைத்துக் கொள்ளவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும்.

இனப்பெருக்க உறுப்புகளின் தூய்மை

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் மாதவிடாய் நேரங்களில் அவசியம் தூய்மையான, மென்மையான துணியினைப் பயன்படுத்த வேண்டும். துணியினை (நாப்கின்ஸ்) ஒரு நாளில் குறைந்தது இரண்டு முறை மாற்ற வேண்டும்.

வெள்ளைப் போக்குடன் (வெள்ளைப்படுதல்) துர்நாற்றம் காணப்படும் பெண்கள் அவசியம் மருத்துவரை அணுகவும்.

இனப்பெருக்க தடத்தில் (உறுப்புகளில்) நோய்தொற்றினை காணும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறைகளை (காண்டம்ஸ்) பயன்படுத்தவும்.

இனப்பெருக்க உறுப்புகளை உடலுறவுக்கு முன்பும் பின்பும் கழுவவும் (சுத்தம் செய்யவும்)

உணவு மற்றும் சமையலின் போது சுகாதாரம்

சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில் சமைப்பதினால் உணவு மாசுபடுதல், உணவு நச்சுப்படுதல், மற்றும் நோய் பரவுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தலாம்.

சமைக்கும் பகுதி மற்றும் சமையல் சாமான்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அழுகின மற்றும் கெட்டுப் போன உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

சமைப்பதற்கு முன்பு மற்றும் பரிமாறும் முன்பு கைகளைக் கழுவ வேண்டும்.

காய்கரி போன்ற உணவுப் பொருட்களை சமைப்பதற்கு முன் நன்கு கழுவவேண்டும்.

உணவுப் பொருட்களை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும்.

உணவுப் பொருட்களை வாங்கும்முன் எந்த நாள்வரை அந்த பொருளினைப் பயன்படுத்தலாம் என்ற விவரத்தை பார்த்து வாங்கவும் (பெஸ்ட் பிபோர் என்று அட்டையில் குறிப்பிடப்படும் தேதி).

சமையலறைக் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்தவும்.

மருத்துவ சுகாதாரம் (அ) நலன்

காயம் ஏற்பட்டால், சரியான சுத்தமான பேன்டேஜ் /துணியினை உபயோகித்துப் பராமரிக்க வேண்டும்.

மருந்துகளை வாங்கும் போது அம்மருந்து செயல் இழக்கும் தேதி என்ன என்பதனை பார்த்து வாங்க வேண்டும்.

தேவையற்ற மருந்துகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

http://www.indg.in/health/



வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் 'நான் யார்' , ' என் வாழ்க்கையின் பயன் என்ன?' போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பு.

மனிதர்கள் ஞானிகளாகவும், மாபெரும் சாதனையாளர்களாகவும் ஆவதும் இக்கேள்விகளால் தான்.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில்...

நான் யார்? என் உள்ளம் யார்? நானங்கள் யார்? என்னை யார் அறிவார்?
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் ?
[ நானங்கள் - ஐந்து புலன்கள் ]

திருக்குறள் அதிகாரங்கள் நிலையாமை(34), துறவு(35), மெய்யுணர்தல்(36), அவாவறுத்தல்(37 ) இந்த அகத்தாய்விற்கு வெகுவாக உதவுகிறது.

நம் கண்களுக்கு தெரிவது இந்த உடல். இந்த உடல்தான் நானா? உடல் கோடானு கோடி திசுக்களால் ஆனது என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த உடலில் உள்ள திசுக்கள் சுமார் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாக புதுப்பித்துக் கொள்கிறது. 2001 ஆண்டில் என் உடம்பில் இருந்த திசுக்கள் அனைத்தும் இப்போது இல்லை என்கிறது விஞ்ஞானம். மேலும் திசுக்களில் எதனால் ஆனது? அணுக்களால். அந்த அணு புரோட்டானும், நியூட்ரானும், எலெக்ட்ரானும் ஆனது என்றும் அறிவியல் கூறுகிறது. அணுவை நுண்ணியத் துகள்களாக பிரித்தாலும், 99.99% 'வெற்றிடமாக' இருக்கிறது என்றும் அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.

அப்படியென்றால் நம் உடல் என்பது 99.99% 'வெற்றிடம்' என்றும், அப்படி கொஞ்சம் நஞ்சம் மீதி உள்ள துகள்கள் அனைத்தும் தொடர்ந்து அழிவதும், பிறப்பதுமாக இருக்கிறது. 2 ஆண்டுகள் முன் இருந்த உடல் கூட இப்போது என்னிடம் இல்லை! . அப்படியென்றால் நான் இந்த உடல்தான் என்று சொல்வது சிற்றறிவு தானே?

நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவு ஆண்மை கடை. [ நிலையாமை 34: 1]
[ புல்லறிவு - சிற்றறிவு ; கடை - கடைசி]

'காயமே இது பொய்யடா. காற்றடைத்த பையடா'
என்ற பாடல் புரிய ஆரம்பிக்கிறது.

இந்த ஆராய்ச்சியில் தெளிவாக தெரியும் ஒன்று. 99.99% வெற்றிடமாக உள்ளது உண்மையில் வெற்றிடமா? அல்லது வெட்ட வெளி போல் தோன்றும்
பேரண்டமா(Gallaxy)?

நான் இந்த உடல் இல்லையென்றால், உள்ளமாக இருக்க முடியுமா? உள்ளம் என்பது என்ன? நம்மை சிந்திக்க வைத்து, உடலின் அனைத்து பாகங்களை இயக்குவதும், உணர்வுகளின் ஊற்றும் அதுதான். உதாரணமாக 'பசி' என்று உடலுக்கு சொல்வது இந்த மனம்தான். 'நினைவு' என்பது இந்த மனத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நினைவில்லாமல் பசி தோன்றாது ; நினைவில்லாமல் சூடான இட்டலி, சாம்பாரை பார்த்தவுடன் எச்சில் ஊறவும் செய்யாது. நினைவே மனத்திற்கு ஆதாரம். முதல் முறையாக ஒரு உணவை பார்க்கும்போது எந்த நினைவும் இல்லாமல் சுரப்பிகள் வேலை செய்வது இல்லை. ஆனால் ஒரு முறை சுவைத்துவிட்டால் அந்த 'நினைவு' பதிந்து விடுகிறது. அடுத்த முறை அதை படமாக பார்த்தால் கூட, நினைவு மனத்தின் மூலம் வயிற்றில் சுரக்க வைக்கிறது. ஐந்து புலன்கள்(கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) நினைவுகளை தோற்றுவிக்கும் கருவிகளாக இருக்கிறது. ஆதலால்தான் மனத்தை அடக்க வேண்டும் என்றால் ஐம்புலன்களை காக்க வேண்டும்.

ஒருமையில் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து [ அடக்கமுடைமை 13 : 6 ]

அப்படி ஐம்புலன்களில் தம் கட்டுக்குள் வைத்தவர்கள் பெரியோர் என்கின்றார்.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றுஐந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு. [ நீத்தார் பெருமை 3 : 7 ]

நம் மனதின் இன்னொரு வெளிப்பாடு எண்ணம். எண்ணங்கள் பெரும்பான்மையானவை புலன்கள் தயாரிப்பவை. சாலையில் செல்லும்போது பெரிய தாடி வைத்த ஒருவர் என்னைக் கடக்கிறார். உடனே 'தாடி வேலை இல்லாதவராக இருப்பாரோ?', 'இவர் போலவே ஒருவரை போனவாராம் பார்த்தேன். அவர் அழுக்குச் சட்டையுடன், கையில் பை ஒன்று வைத்திருந்தார்' ..... என்று ஒன்றை அடுத்து ஒன்றாக எண்ணங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கும் நினைவு வெகுவாக உதவுகிறது.

மனத்தில் தோன்றும் எண்ணங்கள் உடலுக்கு தெரியாமல் மறைந்திருக்க முடியுமா? வீட்டில் நுழைகிறோம். மேசையில் சிகப்பு நிறம் தோய்ந்த கத்தியை பார்க்கிறோம். புலன் தெரிவிக்கும் இந்த செய்தி, எண்ணமாக('நம் வீட்டில் ஏதோ விபரீதம்') மாறுகிறது. நினைவையும்( 'சினிமாவில் இதுபோன்ற கத்தியை பார்த்திருக்கிறேன்') துணைக்கு அழைக்கிறது. விளைவு : அட்ரினலின் சுரந்து உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன. உண்மையிலேயே காய்கறி வெட்டும் கத்தியில் குங்குமப் பொட்டு சிதறி சிகப்பாகி உள்ளது.

நினைவு மனத்திற்கு ஆதாரம் என்றால், எண்ணம் ? எண்ணமே மனம். மனத்தை உடைத்து உடைத்து பகுத்தாய்ந்தால் நாம் சென்றடைவது 'எண்ணம்'. அதிலும் தொடர்ந்து எண்ணங்களையா நம் கொடுக்கிறது. ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடுங்கள் . முதல் எண்ணம்: ' நாளை விடுமுறை' , அடுத்த எண்ணம் ' இரவு என்ன சாப்பிடலாம்' ... என்று இரயில் வண்டிபோல் வந்துகொண்டிருக்கும். ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடையே ஒரு 'வெட்டவெளியை' காணலாம். இந்த வெட்ட வெளியில் தங்கியிருந்தால் ஒருவித அமைதி தெரிகிறது. ஆனால் அதிகநேரம் இந்த எண்ண இடைவெளியில் அமர்ந்திருக்க முடியவில்லை. ...

மனம் எண்ணங்கள், நினைவுகள் ஆனது என்று பார்த்தோம். அந்த எண்ணங்களும், நினைவுகளுமே மாறிக் கொண்டே செல்வதையும் பார்த்தோம். ஆதலால் 'நான்' மனமும் அல்ல என்பதை உணர முடிகிறது.

உடலை ஆய்ந்துப் பார்த்தால் அங்கும் 'வெட்ட வெளி' யால் நிரம்பி இருப்பதை அறிகிறோம். மனத்தை ஆராய்ந்து பார்த்தால், எண்ணங்களுக்கு இடையே 'வெட்ட வெளி' நிறைந்திருப்பதை பார்க்கிறோம்.

மேலும் 'நான்' உடலும் உல்லை; மனமும் இல்லை என்பதை காண முடிகிறது.

அப்படியென்றால் 'நான்' உயிராக இருக்க முடியுமா?

-கரு.மலர்ச் செல்வன்



“நான் யார்?” என்ற கேள்விக்கு பதில் தேடி ஞானியரும் துறவியரும் ஆண்டாண்டு காலமாக அலைந்து வந்திருக்கிறார்கள். ‘இது ஏதோ சித்தர்களும் பெரும் தத்துவ அறிஞர்களும் பேசுகின்ற கருத்து; நமக்கு எதற்கு?’ என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

ஆனால் மனதின் ஆற்றலைப் பேசுகின்ற இத்தொடரில் இக்கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது ஆகிறது.

ஒரு விளையாட்டு போல, புதிர்போல, குறுக்கெழுத்துப் போட்டி போல இக்கேள்வியைக் கேட்டு பதில் தேடிப் பார்ப்போமே.

‘நான் யார்?’ என்ற கேள்வியைக் கேட்டு அதற்குண்டான பதிலையும் நீங்களே சொல்லுங்கள் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.

‘நான் ராமசாமி’, என்கிறீர்கள், ‘நீங்கள் மட்டும்தான் ராமசாமியா? எத்தனையோ ராமசாமிகள் உள்ளனர். அவர்களும் நீங்களும் ஒன்றா’ என்று கேள்வி கேட்கிறேன்.

‘நான் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்கிறீர்கள்.

‘அது உங்கள் பதவி’ என்கிறேன்.

‘தொண்டாமுத்தூர் கோவிந்தசாமியின் மகன் என்கிறீர்கள்.

‘அது உங்கள் மரபு’ என்கிறேன் நான்.

‘நான் தொண்டாமுத்தூர் நேருவீதி 2/12 இல்லத்தில் வசிப்பவன்’ என்கிறீர்கள்.

‘அது உங்கள் இருப்பிடம்’ என்கிறேன் நான்.

‘நான் புருவத்தின்மேல் மச்சம் கொண்ட, சற்றே மாநிறமான, 6 அங்குலம் உயரம் கொண்ட ஆண் என்கிறீர்கள்.

‘அது உங்கள் அடையாளம்’ என்கிறேன் நான்.

‘சரிதான் ஐயா, நான் யார் என்று எனக்கே தெரியவில்லை’ என்கிறீர்கள்.

உண்மைதான்.

நாம் யார் என்று நமக்கே தெரிவதில்லை. அது உண்மை. அதுதான் உண்மை.

இத்தனை நாட்கள் ‘நான்’ என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு பெயர், ஒரு மரபு, ஒரு அடையாளம், ஒரு இருப்பிடம் என்று ஆகிப் போனது.

உங்கள் மனம், உங்கள் ஆற்றல், உங்கள் சக்தி, உங்கள் எண்ணம், உங்கள் இலட்சியம், உங்கள் போக்கு, உங்கள் பண்பாடு இவைதான் உங்களின் ‘நான்’ யார் என்று தீர்மானிக்கிறது.

நீங்களோ உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த எண்ணமே
நீங்கள் என எடுத்துக் கொள்கிறீர்கள். நிறையப்பேர் தன்னைப் பற்றிய சரியான தீர்மானம் இல்லாமல், மற்றவர்கள் தன்னைப்பற்றி சுட்டிக் காட்டுவதை கணிப்புரையாக ஏற்றுக்கொண்டு அடங்கிக் போகிறார்கள்.

பெற்றோர் பிள்ளையை திட்டுகிறார்கள். ‘வெட்டிப் பயலே, முட்டாப் பயலே, உதவாக் கரையே’ என்று. இந்தப் படிமம் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் தங்கி அவர்கள் ‘ஓ நாம் இப்படித்தான் போலிக்கிறது’ என்று நாளடைவில் உறுதியான எண்ணமாக மாறிப்போய் தன்னம்பிக்கையே இல்லாத மனிதராக மாற்றிவிடுகிறது. நண்பர்கள் ‘நீ ஒரு வேஸ்டுடா’ என்று திட்டினால் மௌனமாக மனது அதை ஏற்றுக்கொள்கிறது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தன்னைப் பற்றிய சரியான தீர்மானத்தை தானே ஏற்படுத்திக் கொள்ளாததுதான்.

இந்தப் படத்தில் உள்ளபடி கோடுபோட்ட ஒரு சிறுபகுதி தவிர மற்றவையெல்லாம் தவறான பாதையில் உங்களை செலுத்தக்கூடிய வெறுமைப் பிரதேசங்கள்.

நம்மைப் பற்றி நமக்கே தெரியாத உண்மையான ஆற்றல் பகுதியும் உதவப் போவதில்லை; நம்மைப் பற்றி பிறர் தவறாக ஏற்படுத்தும் எண்ணப் பகுதியும் நமக்கு உதவப் போவதில்லை. ஏனவே நம்மைப்பற்றிய சரியான கணிப்புரையே நமக்கு உதவிசெய்து உய்த்தக் கூடியது. இதை வலுப்படுத்த வேண்டும். நம்மை அறியாமலேயே நமக்குள் இருக்கும் ஆற்றல் தன்னை வெளிப்படுத்தும். அரிய தருணங்கள் நிகழ்வதுண்டு. அப்போதுதான் நமக்கு நமது மனதின் அளப்பரிய ஆற்றல் துணைக்கு வரும். நமது ஆற்றல் என்பது வேறு; நமது மனதின் ஆற்றல் என்பது வேறு. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திறமை, உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் நெருப்பு, உள்ளிருக்கும் அறிவு; உங்கள் மனதில் ஆற்றல் என்பது உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை செயலைப்படுத்தி சாதிக்க வைக்கும் எண்ணப்போக்கு. இந்த இரண்டு ஆற்றலையும் முறைப்படி பயன்படுத்தி முன்னேறும் மனிதன் வெற்றி காணுகின்றான். மனதின் ஆற்றல் பழுதடைந்து போனால் நமக்குள் இருக்கும் எல்லையற்ற ஆற்றலும், சக்தியும் திறமையும் வீணாகிப் போய்விடும். ஒன்றின் பயன்பாடு இன்னொன்றின் பயன்பாட்டுக்கு நம்மை நகர்த்தி வெற்றி பெற வைக்கிறது.

உண்மையான ‘நானைக்’ கண்டு பிடிப்பதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. ஒரு வீடு கட்டுவதுபோல நமக்குள் இருக்கும் ‘நானை’ உருவாக்க வேண்டும். வீடுகட்டத் தேவைப்படும் பொருட்களை சிமெண்ட், மண், கல், இரும்புத் தளவாடங்கள் ஆகியவற்றைத் தேடிப்பிடித்து வாங்கி உரிய இடத்தி அடுக்குவது போல நமக்குள் இருக்கும் ‘நான்’ என்ற உருவத்தை உருவாக்க வேண்டும்.. அதற்கு தேவைப்படும் பொருட்கள் வாய்ப்புக்கள் கிடைத்தால் வெளிப்படும். நமது திறமைகள் நமது சக்திகள், நமது ஆற்றல்கள், இவற்றை நாமே கண்டறிந்து தேடிப்பிடித்து சேகரித்து உரிய இடத்தில் அடுக்க வேண்டும். இதற்கு குறுக்கே நிற்பன பிறர் நம்மைப் பற்றி ஏற்படுத்தும் வேண்டாத, பொய்யான விமர்சனங்கள். இவை நமது பணியை சிதறடித்துவிடும். ‘இவர்களுக்கு என்னைப் பற்றி ஒன்றுமே தெரியாது’ என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘இவர்களுக்கு நான் யார் என்று காட்டுவேன்’ என்ற கொஞ்சம் திமிரான எண்ணப்போக்கையும் ஏற்றுக கொள்ள வேண்டும். வாய்ப்புக்கள் தரும் தோல்விகளை விட மனிதர்கள் தரும் தோல்விகளே நமது வளர்ச்சியை தடைபடுத்துவன. எனவே மனிதர்கள் தரும் தோல்விகளை புறக்கணித்து விட்டு வாய்ப்புக்கள் தரும் தோல்விகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்றுத் தோல்வியை அடுத்த முறை வெற்றியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

உங்களுக்கு வியப்பூட்டக்கூடிய ஒரு செய்தி தெரியுமா? உங்களைப் போல் வேறு இல்லை. ஆம், உலகின் ஆறுகோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையிலே உங்களைப்போல் இன்னொரு மனிதர் கிடையாது. உங்கள் முகச்சாயல் கொணடவர்கள் ஒன்றிரண்டுபேர் இருக்கலாம். அவர்களிடம் உங்கள் கல்வி, உங்கள் பண்பாடு, உங்கள் எண்ணப்போக்கு, உங்களின் திறமை இருக்காது. ஒரே மாதிரி முகச்சாயல் கொண்ட இரட்டையர்களிடம் கூட ஒரே மாதிரி குணநலன்கள் இருக்காது. எனவே நீங்கள் நீங்கள்தான். இன்னொருவர் கிடையாது. ஆங்கிலத்தில் “unique” என்று சொல்வார்களே அதுபோல நீங்கள் ஒரு தனிப்பிறவி. கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனித்தனி இயல்புகளுடன் படைத்திருக்கிறார். நீங்கள் கடவுளால் தயாரிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான நபர் மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருமே அப்படித்தான். என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா? உடலால் ஓரளவு ஒரே மாதிரி தோற்றமளிப்பவர் கூட மனதால் பெருமளவு வேறுபடுகிறார்கள். “Our universe apparently does ont indulge in duplicates: Each creatin is virtually unrepeatable” என்கிறார் டாரதி கார்கில் பிரிக்ஸ் என்ற எழுத்தாளர்.

எனவே உங்களின் ‘நான்’ எத்தகையது என்று நினைத்து பார்த்தீர்களானால் மலைத்துப் போய்விடுவீர்கள். இலட்சத்தில் ஒருவன், ஆயிரத்தில் ஒருவன் என்றெல்லாம் சொல்வார்களே அதெல்லாம் பொய். நீங்கள் ஆறு கோடியில் ஒருவன் அல்லது ஒருத்தி. மிக மிக பிரத்யேகமான தனிப்பட்ட, முற்றிலும் வேறுபட்ட குணங்களுடன், இயல்புகளுடனும், ஆற்றல்களுடனும், திறமைகளுடனும் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவது எவ்வளவு தவறானது இன்னொருவின் கார்பன் காபியாக நீங்கள் இல்லாதபோது, அவருடைய வாழ்வுடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஏங்குவது எவ்வளவு மோசமானது! ஒரு உலக அதிசயத்தை பார்க்க வேண்டுமா? வேறெங்கும் தேடித் திரியாதீர்கள். கண்ணாடி முன்னால் நின்று பாருங்கள். உலக அதிசயம் தெரியும்! ஆம், நீங்களே ஒரு உலக அதிசயம்தான்! காரணம் உங்கள் படைப்பே முற்றிலும் வித்தியாசானது என்பதனால் உங்கள் பெருமையை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் எவ்வளவ அரிதானவர் என்பது இப்போது புரிகிறதா? இப்படிப்பட்ட அரிதினும் அரிதான ஒரு பிறவியைப் பெற்ற பின் வேறென்ன வேண்டும். ஒரு கரப்பான் பூச்சியைப் போலத் தான் இன்னொரு கரப்பான் பூச்சி இருக்கிறது. ஒரு ஈயைப் போலத்தான் இன்னொரு ஈ இருக்கிறது. ஒரு மாட்டைப் போலத்தான் இன்னொரு மாடு இருக்கிறது. ஆனால் ஒரு மனிதனைப் போல இன்னொரு மனிதனோ ஒரு மனுஷியைப் போல இன்னொரு மனுஷியோ கிடையாது.

இத்தகைய அதிசயப் பிறவியாகிய உங்களின் ஆழ்மனம் ஆழ்கடலைப்போல ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை உள்ளடக்கியது. இந்த மனித மனத்தின் அதிசயங்களே மனிதப் பிறவியை அரிதினும் அரிதாக்குகிறது. இந்த மனதின் ஆற்றலைக் கொண்டு நீங்கள் செயற்கரிய செய்ய முடியும். உங்களின் ‘நான்’ எவ்வளவு அற்புதமானது என்று தெரிந்துகொண்டால் உங்களைப் பற்றி உங்களுக்கே புதிதாய் உணர வழி ஏற்படும்.

ஒரு நூலகம். அங்கே ஒரு ஜென் துறவி வருவார். ஒரூ மூலையில் அமர்ந்து கண் மூடி தியானத்தில் ஆழ்ந்து போவார். எதையும் எடுத்து படிக்க மாட்டார். நூலக அதிகாரி அவரை ஒரு மாதமாக கவனித்து பின் அணுகினார்.

‘சுவாமி! தாங்கள் இங்கு தினமும் வருகிறீர்கள். ஆனால் ஒரு நூலையும் எடுத்துப் படிப்பதில்லை காரணம் அறியலாமா?’ என்று கேட்டார்.

‘அதுவா? எனக்கு படிப்பறிவே கிடையாது!’ என்றார் ஜென் துறவி.

‘பின் எதற்கு வருகிறீர்கள்’ என்று கேட்டார் நூலகர்.

அதற்கு துறவி ‘நான் ‘என்னையே’ படிப்பதற்காக இங்கு வருகிறேன். படிப்பதற்கு ‘என்னைத் தவிர வேறெந்த தத்துவ சாஸ்திரமும் வேதாந்த நூல்களும் மேலானது?’ என்று திருப்பிக் கேட்டார் துறவி.

ஆம், ‘தன்னைப்’ படிக்காமல் ஆயிரம் நூல்கள் படித்தும் பயனில்லை.

- ஜெ. கமலநாதன்

http://www.thannambikkai.net/2008/02/01/377/