"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


ருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையமாக கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதை தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.

முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக, கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவை தவிர்பது நல்லது.
இரண்டாவது எளிமையான முறை, கருமுட்டை கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் அல்லது பெண் செய்து கொள்ளலாம்.
வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகள் மூலம் கரு முட்டையும் கரு அணுவும் இணைந்து கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.
பெண்ணின் கருப்பையில் ஐயுடி பொருத்துவதன் மூலம் கருவளர்வதை தடுக்கலாம்.
கருத்தரித்த பின் கூட குறிப்பிட்ட நாட்களுக்குள் கருச்சிதைவு செய்துகொள்ள இயலும். மாத்திரைகள் மூலம் கூட கருவை கலைக்கலாம்.
மேற் குறிப்பிட்ட கருத்தடை முறைகளை அவர் அவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்ககியத்திற்கு ஏற்றார் போல் கைகொள்ளலாம்.

கருத்தடை முறைகளை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

எந்தெந்த சந்தர்ப்பங்களில் கருத்தரிப்பு நிகழும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
கருத்தடை முறை பாதுகாப்பானதா அல்லது ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்
நீண்டநாள் உபயோகம் செய்யும்போது பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்
அது தாய்பால் அளிப்பதில் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதையும், தாய்பாலில் கருத்தடை மருந்தின் குணங்கள் கலந்து விட வாய்ப்புள்ளதா என்றும் அறியவேண்டும்
பிறக்க இருக்கும் குழந்தையின் உடல்நலத்தை பாதிக்குமா என்பதை அறிதல்
கருத்தடை சாதனம் உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமையை ஏற்படுத்துமா. உதாரணமாக, ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் பிரச்சனைகள்
கருத்தடை சாதனம் தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா

அ. கருத்தடை - இயற்கை முறை

1. ரிதம் (காலண்டர்) முறை
இந்த முறைப்படி, மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்குப் பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சி பருவத்தில், உடலுறவை தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம், மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும்.
இந்த முறையில், பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு, இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

2. பில்லிங்ஸ் முறை
பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சி பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன், இது சற்று குறைந்த அளவில், வறண்டும், கெட்டியாகவும், வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்பு தன்மை கருமுட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும். இந்த மாறுபாடுகளை கவனிக்கும் போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

3. உடலில் வெட்ப மாறுபாடு
பெண்கள் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தில் நடுப்பகுதியில் கண்காணித்தில் வேண்டும். அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும் போது, உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்உறீட் அதிகமாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவை தவிர்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையை தெரிந்து கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆ. தடுப்பு முறை (கரு முட்டை கரு அணு இணைவதை தடுக்கும் முறை)

ஆண்கள் அணியும் ஆணுறை
ஆண்கள் அணியும் ஆணுறை உடலுறவிற்கு முன்பு அணிந்து கொள்வதன் மூலம், கரு அணு கர்பப்பபையில் கருமுட்டையுடன் இணைவதை தடுத்து கருத்தரிப்பை தவிர்க்க இயலும். ஒரு முறை உபயோகித்த ஆணுறையை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படுவதுடன் எய்ட்ஸ் மற்றும் உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க இயலும்.

டயாபர்ம் பெண்களுக்கான கருத்தடை சாதனம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களுக்கான கருத்தடை சாதனம் 2-4 இன்ச் வட்டவடிவில் ஒரு ரிங் இணைக்கப்பட்ட பொருளாகும். இதை ஆரம்பக்கட்டத்தில் ஒரு மருத்துவரின் அல்லது ஒரு மருத்துவ ஊழியரின் உதவியுடன் பொருத்திக் கொள்ள பழகி விட்டால் பின் சுயமாகவே பெண் உடலுறுப்பில் பொறுத்திக் கொள்ள இயலும். இதை அணிவதன் மூலம் கரு அணு கரு முட்டை இணைவதை தடுத்து கருதரிப்பை தவிர்க்க இயலும். ஒருமுறை உபயோகித்தப்பின் அதை சோப்பு போட்டு சுத்தப்படுத்தி மீண்டும் அடுத்த முறை உபயோகம் செய்யலாம். இதன் விலை சற்றே அதிகமானாலும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெண்களுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது.

சர்விகல் கேப்
இது டயாபர்ம் போன்றே சர்விக்ஸ்-ல் பொருத்தி கொள்ள கூடிய ஒரு ரப்பர் கேப். இதை அணிந்து கொள்வதன் மூலம் சர்விக்ஸின் திறப்பு மூடப்படுவதால் கருத்தரிப்பு நிகழ்வு தடைப்படுகிறது.

பெண்களுக்கான கருத்தடை பொருள்
பெண்களுக்கான இந்த கருத்தடைப் பொருள், பாலியுரித்தனால் செய்யப்பட்ட மெதுவான, பெண்களின் உடலுருப்பில் பொருத்திக்கொள்ள கூடிய வசதியுடன் உள்ள ஒன்றாகும். உடலுறவிற்கு முன்பே இதை பொருத்திக் கொள்வதன் மூலம் கரு அணு கரு முட்டையுடன் இணைவதை தவிர்கலாம். இது கருத்தரிப்பை தவிர்ப்பதுடன், எய்ட்ஸ் மற்றும் உடலுறவின் மூலம் ஏற்படும் நோய்களை தடுக்கவும் இயலும். ஆனால் சற்றே விலை அதிகமானது.

ஸ்பெர்மிசைடு
ஸ்பெர்மிசைடு என்பது பெண் உறுப்பில் தடவிக்கொள்ளும் ஒரு ரசாயன பொருளாகும். இது கரு அணுவை செயலிழக்கச் செய்வதால் கருத்தரிப்பை தடை செய்ய இயலும். இது மெதுவான நுரை வடிவத்திலும், மாத்திரைகள், கிரீம் வடிவத்தில் உள்ளது. இதன் பக்க விளைவுகள் கூட மிகக் குறைவே. ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை விளைவுகளை கொடுக்கலாம்.

நடைமுறை வழக்கத்தில் உள்ள கருத்தடை முறை

தாய்பால் அளிப்பது
குழந்தை பிறந்த பின் ஒருசில மாதங்களுக்கு கருமுட்டை வளர்வது, மீண்டும் மாதவிடாய் ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட சற்றே தாமதம் ஏற்படும். தாய்பால் அளிக்கும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் கருத்தரிப்பை தள்ளி போட இயலும்.

கருத்தடுப்பு சாதனங்கள்

ஐயுடி
ஐயுடி என்பது சிறிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு கர்ப்பபையில் பொருத்திக் கொள்ளப்படும் ஒரு கருத்தடை சாதனம் ஆகும். கர்ப்பப்பையில் உள்ள இந்த பொருள் கருத்தரிப்பை தடை செய்து கரு அணுவும் கரு முட்டையும் இணைந்து வளர்வதை தடை செய்கிறது.
நம் தேசத்தில் புழக்கத்தில் உள்ள இந்த கருத்தடை பொருளின் பெயர் காப்பர் டி. இது பொருத்தப்பட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் மாற்றப்படவேண்டும். இது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ளபட வேண்டிய ஒன்று. ஆனால் இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக கருதப்படுகிறது. ஆனாலும் இதில் ஒருசில பக்க விளைவுகள் உள்ளது.

பொருத்தப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வலி ஏற்படுகிறது
மாதவிடாயின்போது அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது
மிக அறிதாக கர்ப்பபையின் உள்சுவர் தோலில் பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் போது, அதை நீக்கும் நேரத்தில் வலி ஏற்படலாம்.
ஐயுடி பொருத்திக் கொள்வதால் கர்ப்பப்பையில் வெளிப்புறத்தில் முக்கியமாக பெல்லோபியன் டியுபில் கரு வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் இன்பெக்ஷன் ஏற்பட்டு சரியான மருத்துவ வசதி இல்லாத போது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட நேரிடலாம்

ஸ்டிராய்டு அல்லாத மாத்திரைகள்
இந்த மாத்திரைகளும் கருத்தரிப்பை தடுக்க உதவும்.

ஹார்மோன் முறைகள்

ஹார்மோன் முறைகள்
ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் முறையில், ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் உடலில் மாற்றப்படுவதால் கரு வளர்ச்சியையும் கரு அணு வளர்ச்சியையும் தடுக்கப்படுகிறது. மேலும் இது சர்விகல் சுவரை அடர்த்தியாக செய்வதால் கரு அணு கர்ப்பபைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால் இம்முறையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் கருத்தடை மருந்துகள்
ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் கலந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஒவரியில் வளரும் கருமுட்டைகளை வளரவிடாமல் தடுப்பதால் கருத்தரிப்பு ஏற்படாமல் தடுக்க இயலும். மாலா டி குறைந்த வீரியம் உள்ள பாதுகாப்பான கருத்தடை மருந்தாகும்.

ப்ரோஐஸ்ட்ரோன் மட்டும் உள்ள மருந்துகள்
ப்ரோஐஸ்ட்ரோன் மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்ளும்போது, சர்விகல் ம்யுகஸ் அதிகமாக்கியும், கரு அணு கரு முட்டை நகர்வதை குறைத்தும், கரு வளர்வதை தடுக்கிறது. ஆனால் இம்முறையில் உடல் நலத்தில் பக்க விளைவுகள் உள்ளது.

அவசரகால கருத்தடை மாத்திரைகள்
பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இத்தகைய கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிப்பை தவிர்கலாம். இதன் பக்க விளைவுகளாக, வாந்தி அடுத்த மாதவிடாய் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் இந்த முறை 100 % நம்பகமானதல்ல.

நிரந்தர கருத்தடை முறைகள்

நிரந்தரமாக செய்து கொள்ளும் இந்த முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்து செல்லும் குழாயை தடுப்பது அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப்படுகிறது. இம்முறையில், தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்றபோதே செய்து கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை
வாசக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல். இந்த அறுவை சிகிச்சையை செய்வதன் மூலம் கரு அணு செல்வது தடைபடுவதால், பெண்கள் கருத்தரிப்பதை தவிர்க்கலாம். ஆனால் அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாரம் வரையில் அதிக பளுவுள்ள பொருட்களை தூக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்கு பின் வீக்கம், வலி, ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பெண்களுக்கான நிரந்தர கருத்தடை
இந்த முறையில், பெண்களின் பிறப்புறுப்பில் செய்யும் சிறிய அறுவை சிகிச்சையால், ஒவரியில் வளரும் கருமுட்டை கரு அணுவுடன் இணைவது தடுப்கப்படுகிறது. சரியான முறையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை முறை சிறந்த கருத்தடை முறையாகும். ஒரு சில நேரங்களில் இன்பெக்ஷன், ரத்தக்கசிவு ஏற்படலாம். அதிக வலி மற்றும் உதிரம் போக்கு இருக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வும், 2-3 நாட்களுக்கு அதிகபளுவோ தூக்கக் கூடாது.

கருச்சிதைவு
கருச்சிதைவு என்பது கரு முழுமையான வளர்ச்சி அடைவதற்கு முன்பே செய்யப்படுவது. ஒரு சிலருக்கு இயற்கையாகவே கருச்சிதைவு ஏற்படும். மருத்துவ வசதியை உபயோகித்து கருவை கலைக்க இயலும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் ஏற்படும் கருவை கலைப்பதற்கு இம்முறை கையாளப்பகிறது. மருத்துவ முறையில் செய்யப்படும் கருச்சிதைவுக்கு 1972ம் ஆண்டு சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டது. கரு வளர்ச்சியின் தன்மை அல்லது நாட்களுக்கு ஏற்ப வெவ்வேறு கருச்சிதைவு முறைகள் கையாளப்படுகிறது.

சக்ஷன்
இந்த முறையை 6ல் இருந்து 8 வாரம் வரை வளர்ந்த கருவை கலைப்பதற்கு உபயோகிக்கின்றார்கள். இது, லோக்கல் அல்லது பொது அனஸ்தீஸியா அளித்த பின் வளர்ந்த கருவை உறிஞ்சி எடுத்து விடுவதாகும். இதற்காக மருத்துவ மனையில் தங்குவது அவசியம் இல்லை.

டி-சி
இந்த முறையில் 8ல் இருந்து 16 வாரங்கள் வரை வளர்ந்த கருவை ஒரு கம்பி மூலம் கலைத்து பின் கர்ப்ப பையை சுத்தம் செய்து விடுதலாகும்.

கருவை வெளியே வரவைக்கும் முறை
16-20 வாரம் வளர்ந்த கருவை, மருந்துகளை உபயோகித்து வெளியே வரவைப்பதாகும். இம்முறை அனீஸ்தீஸியா அளித்து செய்யப்படும். இதற்காக மருத்துவமனையில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்க வேண்டி வரும்

கருச்சிதைவு மாத்திரைகள்
கருச்சிதைவு மாத்திரைகள் உபயோகிப்பதன் மூலம் 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை வளர்ந்த கருவை கலைக்க இயலும். ஆனால் இதில் பக்க விளைவுகள் சற்று அதிகம். இம்முறையில் மிக அதிகமான உதிரப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படலாம்.

http://www.indg.in/health/womenhealth/b95bb0bc1ba4bcdba4b9fbc8