"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


ளிமண்ணைத் தண்ணீர் பக்குவப்படுத்துகிறது. என் உள்ளத்தைக் கண்ணீர் பக்குவப்படுத்துவதாகுக.

மண்ணில் விளைவை உண்டுபண்ண மழை பெய்கிறது. துன்பக் கண்ணீர் உள்ளத்தைத் திருத்திச் செப்பனிடுகிறது. கார்மேகம் சூழ்வது பூமியைக் குளிரச் செய்வதற்காக. நனைந்து குளிர்ந்த பூமியினின்று விதை முளைக்கிறது. துயரம் என்னும் மேகத்திலும் மழையிலும் மூடப்பெற்ற உள்ளம் ஞான விளைவுக்கு ஏற்றதாகிறது. விசாரம் உள்ளத்தை உழுகிறது. துன்பம் அதை மிருதுவாக்குகிறது. பின்பு ஞானோதயம் உண்டாகிறது.

துன்பக்கண் ணீரில் துளைந்தேற்குன் ஆனந்த
இன்பக்கண் ணீர்வருவது எந்நாள் பராபரமே.

-தாயுமானவர்