"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

அன்பு என்பது எப்போதும் மிக ஆழமானது, மலரும் தன்மையுடையது. அது முழுமையில் கலக்கும் அற்புதக்கலை. யாரும், யாருக்காகவும் இல்லை. உள்ளுக்குள் தனி விருப்பு-வெறுப்புகள் உண்டு, மற்றவர்க்கும் அதே. தனிமையை நாம் விரும்புவதில்லை, அதில் வெறுப்பும் விரக்தியும் உணர்கிறீர்கள். ஆனால், தனியாக சுற்றித்திரிவது தனிமையாகாது ! அது பிரக்ஞை நிலையில் உச்சத்தன்மையில் இருப்பதாகும். அந்த நிலையில் பரவும் அன்பு கொண்டாட்டமானது உங்கள் அன்பை, உங்கள் பாட்டை, உங்கள் இசையை, உங்கள் ஆடலை மற்றும் இந்த அழகிய மரங்களை, வெகுளி நிறைந்த அந்த பறவைகளின் ஒலியை, இரவில் தெரியும் நட்சத்திரங்களை இப்படி எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக கொண்டாடுங்கள் பிறரோடு உண்மையாகப் பங்கிடுவது எதுவென்றால், உங்கள் ஆழ்ந்த அமைதி, ஆனந்தம் மற்றும் கொண்டாட்டம்தான். அப்பொழுது உங்கள் இதயம் மெல்ல மெல்ல உருகி, மற்றவர்களோடு ஒன்று கலக்கும் . அப்பொழுது உங்கள் அன்பு ஆத்மிகமாக மாறுகிறது.

- ஓஷோ