"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

வாழ்க்கையை வாழ வேண்டுமென்று இல்லாமல்! வாழ்க்கையை வசப்படுத்துங்கள்...!



பாடல் வரிகள் & பாடியவர்: சுஜித்ஜி.

பாடலுக்கு இசை: சந்தோஷ்.


மனித மனங்கள் எப்போதும் விசித்திரமானவை. அச்சப்பட்டு அடங்கி ஒடுங்கி வாழும் இயல்பு சமூகத்தில் ஒரு சில மனிதர்களுக்கு இருப்பதும், ஒரு சிலர் தனது தடைகளையும், தடங்கல்களையும் தாண்டி வெற்றிக் கொடி பதிப்பதும் நாம் கண் கூடாகக் காண்பவையே!

கலைகள் எப்போதும் மனதிற்கு மகிழ்வினைத் தருகின்றவையாகவே விளங்குகின்றன, இந்த வகையில் மேற்குலகில் பல புரட்சிகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற சொல்லிசையை (Rap Music) தனது கருத்துக்களை மக்களுக்குச் சொல்வதற்கேற்ற ஊடகமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஒரு இளங் கலைஞன், அவர் தான் இன்று எல்லோராலும் உலகெங்கும் ''வாழ்வும் வரும் சாவும் வரும்.....'' எனும் பாடலினூடாக அறியப்பட்ட சுஜித்ஜி அவர்கள்.

இக் கலைஞன் தன் வாழ்வில் தான் சந்தித்த துயர்களையும், தமிழிசைக்குள் சொல்லிசை ஊடாக நமது மக்களுக்குத் தனது கருத்துக்களைச் சொல்வதற்காக தான் ஆரம்பகாலத்தில் பாடல்களை உருவாக்கி வெளியிட்ட போது சமூகம் தனக்கு ஏற்படுத்திய வலிகளையும் பாடலாக்கியுள்ளார். இந்தப் பாடல் மனதிற்கு நம்பிக்கை தருகின்ற நல்ல பல கருத்துக்களை உள்ளடக்கிய பாடலாகும். 'அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்பது எம் ஆன்றோர் பழமொழி. இந்தப் பழமொழிக்கமைவாக சுஜித்ஜி எப்படி அடிமேல் அடி வைத்துள்ளார் என்று படித்துப் பாருங்கள்.

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு

இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்
அது ஆட்டு மந்தை சேர்ந்து கூவும் சந்தை
தனிமனித கருத்து எத்தனை பேருக் கிருக்கு
ஊர் சொன்னா சரி பிழை சொன்னா பிழை
உருக்குனக்குப் பயம் கிடைச்சதென்ன நயம்
உனக்கமைதி போகும் தொல்லை குடி புகும்
நிம்மதி இனி இல்லை இன்னுமா விளங்கேல்லை
இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

சேர்ந்து வாழும் போது அவர் சிரிக்கிறார்
மேலே போக எண்ணக் குழி பறிக்கிறார்
நல்லோர் இவரா?
நய வஞ்சர் இவரா?
தீயில் வெந்த பின்பும் பினிக்ஸ் பறக்குமே!
சிலிர்ப்புடன் உள்ளுணர்வு பிறக்குமே!
எங்கே வந்து பார்!
என்னைக் கீழே தள்ளிப் பார்!
வந்து தள்ளிப் பார், கொள்ளி வைத்துப்பார்!
வாழ்வினை வாழுவேன் வாழ்வினில் வெல்லுவேன்!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

என் வார்த்தை பிழையாது - பேர்
பலத்தில் வளையாது

நான் சொல்லி விட்டே போவேன்
உன் தோளைத் தட்டிப்போவேன்!
வாழ்வின் அடி மட்டம் நான்
கண்ட பின் இக் கட்டம்
வந்து நின்றே சொல்வேன் - இம்
மாயைதனைக் கொல்வேன்!
குள்ள நரிக் கூட்டம் அது என்றும் உன்னில் நோட்டம்
இங்கு வாழ்ந்து நீயும் காட்டு அதைத் தூர நீயும் ஓட்டு
வாழ்ந்து காட்டி விடு ஊரின் வாய்கள் மூடிவிடு
நிலம் கடல் வானம் எங்கும் நிம்மதியைக் காணு
நான் சொல்லி விட்டே போவேன்!
உன் தோளைத் தட்டிப்போவேன்!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

http://melbkamal.blogspot.com/2009/01/blog-post_6942.html