"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

மனிதனின் பரிணாமவளர்ச்சியை ஆய்வு செய்த ' டார்வின் ' 1859 -ம் ஆண்டு இதே நாளில் ( நவம்பர் , 24 ) ' உயிரினங்களின் தோற்றம் ' என்ற அறிவியல் ஆய்வு புத்தகத்தை வெளியிட்டார். இங்கிலாந்தில் உள்ள ஷெர்வ்ஸ்பரி என்ற இடத்தில் 1809 -ம் ஆண்டு பிப்ரவரி 9 -ம் தேதி சார்லஸ் ராபர்ட் டார்வின் பிர்ரந்தார். சிறுவயதில் மிகவும் கூச்ச சுபாவம் உடையவராக இருந்தார். 1958 -ம் ஆண்டு ஜூலை 20 -ம் தேதி முதல் தன்னுடைய ஆராய்ச்சிகளை தொகுத்து புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் ' உயிரினங்களின் தோற்றம் ' என்ற பெயரில் 1859 -ம் ஆண்டு இதே நாளில் வெளியானது. இது இயற்கை அறிவியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. மனித இனம் குரங்குடன் தொடர்புடையது என்று அவர் கூறிய கருத்து அப்போது மதரீதியாக பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் வந்தஆராய்ச்சியாளர்கள் குரங்கில் இருந்துதான் மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றது என்று உறுதிசெய்தனர்.
- தினமலர் ( 24-11-2008 )