"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


னிதனின் சக்தி நிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் உள்ளவை. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.

எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவைதான் சக்கரங்கள்.

மனித உடலில நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங்களுக்கென்று தனித்தனி இடங்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது.

சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிகளுக்கேற்ப அவை நகரக்கூடும். இந்த ஏழும் சக்கரங்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவை வட்ட வடிவத்தில் இராது. முக்கோணங்களாகவே இருக்கும். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் ஆகிய சக்கரங்களே அவை.

மூலாதாரம்: உடலின் அடிப்படையான சக்கரம், இந்த சக்கரம் தூண்டப்படிருந்தால் உணவு, உறக்கும் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.

சுவாதிஷ்டானம்: உலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருகி ஈடுபடாட்டிற்குக் காரணமானது.

மணிப்பூரகம்:  உடலின் உறுதி மற்றும் நல மேம்பாட்டுக்கானது. இந்த சக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

அநாகதம்:  இந்த சக்கரத்துகென்று சில முக்கியத்துவங்கள் உண்டு. படைப்பாற்றல், அன்பு போன்றவற்றின் ஆதார சக்கரம் இது. முந்தைய மூன்று சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகியவை உலகியல் இன்பங்களுக்கும், வாழ்க்கைக்கும் உரியவை. அநாகத்த்தை அடுத்து வருகிற விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரஹாரம் ஆகியவை அருள் நிலை, ஆன்மீக வளர்ச்சி போன்றவற்றிற்கு உரியவை.

இந்த இருவேறு நிலைகளுக்கும் மத்தியில் ஒரு சம நிலையான தன்மை அநாகதத்திற்கு உண்டு. இரண்டு இயல்புகளும் கலந்ததாக இது அமைந்துள்ளது. அதனால் தான், மேல் நோக்கிய ஒரு முக்கோணமும், கீழ் நோக்கிய ஒரு முக்கோணமும் பின்னிப் பிணைந்து ஒரு நட்சத்திரத்தை உருவாக்கும் தோற்றமே அநாகத வடிவம்.

மேல் நோக்கியமுக்கோணம் அருளியல் வாவுக்கும் கீழ்நோக்கிய முக்கோணம் உலகியல் வாழ்வுக்கும் அடையாளம். ஸ்ரீ சக்கரம் போன்ற எந்திரங்கள் முக்கோணங்கள் நிரம்பியதாய் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை அநாகதத்தில் இருந்து உருவானவைதான்.

விசுக்தி:  என்பது தீயவற்றை வடிகட்டும் ஆற்றல் சிவபெருமானுக்கு ‘விசுவகண்டன்”; “நீலகண்டன்” என்று பெயர்கள் உண்டு.  இதன் பொருள், விஷத்தை வெளியே நிறுத்தியவர் என்பது. விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்க முடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல, தீய உணர்வுகள், எண்ணங்கள், சக்திகள் என்று விஷத்தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும்.

ஆக்ஞை:  இது ஞானம், தெளிவு, போன்றவற்றுக்கான சக்கரம். விசுக்தியைப் பொறுத்தவரை, அந்தச் சக்கரம் தூண்டப்பட்டால் ஆற்றலோடு நிகழமுடியுமே தவிர சமூகத்தில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். சமூக வாழ்க்கையோடு உடன்பட இயலாது. மக்களிடமிருந்து விலகி வாழ்கிற நிலையிலேயே இருப்பார்கள். ஆனால் ஆக்ஞா முழுவதுமாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத் திகழ்கிறார்கள்.

சஹஸ்ரஹாரம்:  இந்த சக்கரம்,பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒருவிதமான பரவச நிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத் தூண்டப்பட்டவர்களுக்கு உரியது. இவர்களுக்கு உணவு ஊட்டுதல், தூய்மை செய்தல், உடை உடுத்துதல் போன்றவற்றை மற்றவர்கள்தான் செய்ய வேண்டும். இதனால் இவர்கள் “அவதூதர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த ஏழு சக்கரங்களும், வாழ்வின் ஏழு விதமான தீவிரத்தன்மைகள், பெரும்பான்மையான மக்கள் மூலாதாரத்திற்கும் மணிபூரகத்திற்கும் நடுஇல் சக்தி நிலைதூண்டப்பட்டு வாழ்ந்து முடிக்கிறார்கள். சிலருக்கு மட்டுமே அநாகதம் வரையில் அந்த ஆற்றல் துண்டப்படுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாய் சக்தி நிலை உயரும். ஆக்ஞாவிலிருந்து சஹஸ்ரஹாரா நோக்கி சக்தி நகர்வதற்கென்று மறு மையத்திற்கு குதிக்கிற சூழ்நிலைதான் அங்கே. அதற்குத்தான் ஒரு குருவின் பூரணமான அருளும் துணையும் தேவைப்படுகிறது. அதற்கு அளப்பரிய நம்பிக்கை வேண்டும். பல்வேறு பிறவிகளுக்குப் பிறகும் நம்பிக்கை வைக்காதாலேயே இந்த வாய்ப்பை பலரும் இழக்கின்றனர்.

ஆக்ஞாவைத் தொட்டவர்கள் அந்த எல்லையிலேயே நின்று விடுகின்றனர். அடுத்த சக்கரம் நோக்கித் தூண்டிச் செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையும் அர்ப்பணிப்புணர்வும் தேவை. இராமகிருஷ்ணரின் வாழ்வில் அது நிகழ்ந்தது. காளியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், அவ்வப்போதுசில சமாதி நிலைகளை அடைவார். அப்போதெல்லாம் காளியிடம் பேசுவதாக, காளிக்கு உணவு தருவதாக உணர்வார்.

சமாதி நிலை கடந்து வெளிவந்ததும், காளியைத்தேடி சிறு குழந்தை போல் அழுவார். ஆக்ஞாவை எட்டியிருந்த அவர் அதைத்தாண்டிச் செல்ல விரும்பவில்லை. அப்போதுதான் தோத்தாபுரி என்கிற ஞானி இராமகிருஷ்ணரைக் கண்டார். முழுமையான வளர்ச்சிக்குரியவர் ஒரு எல்லையிலேயே தேங்கி நிற்பது கண்டு அவரிடம் நிறையப் பேசிப் பார்த்தார்.

இராமகிருஷ்ணர் ஒப்புக் கொள்ளவில்லை. தோத்தாபுரி, அருகிலிருந்த ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து, இராமகிருஷ்ணரின் ஆக்ஞாவில் அழுந்தக் கிழித்தார். உடனே முற்றிலும் புதிய எல்லையைத் தொட்ட இராமகிருஷ்ணர், பரமஹம்ஸர் ஆனார்.

சக்கரங்களைத் தூண்டுவதென்பது மிகவும் நுட்பமான ஒன்று. ஞானிகளாலேயே அது சாத்தியம். அடிப்படை சக்தி நிலையோடு விளையாடுவதால் அதனை எல்லோரும் செய்து விட இயலாது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் சக்கரங்களைத் தூண்டுவது தொடர்பான ஏமாற்று வேலை ஏராளமாக நடைபெறுகிறது. குண்டலினியை எழுப்புவது பற்றியும் நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன.

ஆத்ம சாதனைகளை, ஆன்மீகப் பயிற்சிகளை இடையறாமல் செய்து வந்தாலே சக்தி நிலை இயல்பாக மேலெழும்பும். ஆன்மீகப் பயிற்சிகள் உரிய முதிர்ச்சி அடையும்போது சக்தி நிலை மேலெழும்புமே தவிர சக்கரங்களைத் தனித் தனியாகத் தூண்டுதும் நல்லதல்ல.

ஏழு நிலையிலும் தீவிரத்தன்மை கொண்ட நமது சக்தி நிலை தூண்டப்படும் பொது மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை உணர்கிறான். அதற்கு பிராணாயாமம் போன்ற முறையான பயிற்சிகளே வழி.

மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் அருட்பேராற்றல், அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும். தன்னை உணர வேண்டுமானால் உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டாக வேண்டுமா? இந்தக் கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள்.

உலகியல் வாழ்க்கை, லௌகீக வாழ்க்கை என்று எதைக் குறிப்பிடுகிறோம்?

நமது உணவை நாமே சமைக்கிறோம். நம் ஆடைகளை நாமே தூய்மை செய்கிறோம். இவையெல்லாம் உலகியலிலன் அங்கங்கள்தான். இவற்றையெல்லாம் செய்யாமல் இங்கே வாழ இயலாது.

ஒவ்வொரு மனிதரும், உலகியலில் தான் எந்த வித்ததில் ஈடுபட வேண்டுமென்பதை, சுய விருப்பத்தின் பேரில் தானாகவே தீர்மானிக்கிறார். சிலர் அரசியலில் இருக்கிறார்கள். சிலர் அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். சிலர் தொழிலகங்களை நடத்துகிறார்கள். சிலர் தரை பெருக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே உலகியலில் இருப்பவர்கள்தான். எனவே உலகியலில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

உலகியலில் என்ன செய்ய விரும்புகிறோம். எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனி மனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்து கொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.

இதில் சிலர் தானாக எதையும் செய்வதில்லை. பிறர் செய்வதையெல்லாம் பார்த்து அது போல் செய்ய முற்படுகிறார்கள். தான் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை.

இத்தகைய ஒரு சிலர்தான், ஆன்மீக வழியில் செல்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் பொறுப்புகளை உதறிவிட்டுப் போகிறார்கள். உலகிற்காக வாழாமல் தனக்காக வாழ்கிறார்கள்’ என்று புகார் சொல்கிறார்கள்.

வீட்டிலும் அலுவலகத்திலும் மட்டுமே இயங்குபவரகள் தனக்காக வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உலக நலனில் அக்கறையில்லை. தனது சொந்த நலனுக்காக என்று வந்துவிட்டு அந்த வலையிலிருந்து விடுபட இயலாமல தவிப்பவரகள் ஆன்மீகப் பாதையில் செல்பவர்களைப் பார்த்து “வாழத் தெரியாதவர்கள், உலகத்தை விட்டு ஒதுங்கிவிட்டவர்கள்” என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.

ஒரு குடிகாரன் இருந்தான். முழுபோதையில் தள்ளாடியபடியே ஒருபேருந்துக்குள் ஏறியவன், எல்லார் கால்களையும் மிதித்து பெட்டிகளைக் கலைத்து, தட்டுத்தடுமாறி, ஒரு கிழவியின் மீது விழுந்தான். கோபம் கொண்ட அந்தக் கிழவி, ‘ நீ நரகத்திற்குப் போவாய்’ என்று சபித்தாள். உடனே அந்தக் குடிகாரன், ‘அப்படியானால் நான் தவறான பேருந்தில் ஏறிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தான்.

எந்தப் பேருந்து சரியானது, எது தவறானது என்பதெல்லாம் குடிகார்ர்களுக்குத தெரியாது. தங்கள் வாழ்வை விதம் விதமான சிக்கல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு, சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்ப்பவர்கள், தங்கள் வாழ்வை திறம்பட நிர்வகித்து விரும்பும் திசையில் திட்டமிட்டு பயணம் செய்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் தவறானவர்கள்’ என்று பேசுகிறார்கள்.

இன்றைய உலகில் 0.1% பேர்தான் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் இருப்பவர்கள். 50% பேர் இயந்திரங்கள் போல் இடையறாமல் செயல்பட்டு, தங்கள் செயல்களாலேயே உலகுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.

மனித சுயநலத்தின் காரணமாய், பூமி, வேண்டாத பாரங்களை சுமந்து கொண்டிருக்கிறது. 50% பேரையாவது ஆன்மீக நெறியில் ஈடுபடுத்தினால் இந்த உலகம் காற்றப்படும்.

அளவுக்கதிமான செயல்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் தங்களுக்கோ, சமூகத்திற்கோ, உலகிறகோ சுற்றுச சூழலுக்கோ கேடு விளைவிப்பதில்லை.

சிறிது கூட விழிப்புணர்வின்றி, தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், மற்றவர்கள் செய்வதையெல்லாம் தாங்களும் செய்ய முற்பட்டவர்கள் பூமி உருண்டைக்கு போதுமான அளவு சேதம் விளைவிக்கிறார்கள். இத்தகைய செயல்களிலிருந்து விடுபடுவதொன்றும் தவறானதல்ல. அதுவே மனித குலத்திற்கு செய்கிற பெரும் உதவி.

இந்த உலகம் எப்போதுமே அற்புதமானதாக இருந்து வந்திருக்கிறது. தன்னலம் மிக்க சிலரின் அடாவடி செயல்கள், உலகுக்கு நன்மை செய்வதாய் நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் தீமைகள், இவைதான் உலகிற்கு எதிரான ஒன்றை ஏற்படுத்தி வருகிறது.

மனிதகுலம் நாகரீகமடைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் மனிதகுலம் வாழ்வதற்காக எத்தனையோ விலங்குகளை வேட்டையாடி, சில சமயம் மனிதர்களையே வேட்டையாடிய பிறகும் மனித குலம் நன்மையடையவில்லை.

மனிதன், வெளிச்சூழலை சரி செய்ய விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் உதவிகொண்டு என்னென்னவோ செய்துவிட்டான். ஆனால் அவன் உள் தன்மையில் நாகரீகமடையவில்லை.

உள்நிலையில் கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மனிதன் உயர்நிலை அடைய இயலும். அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக வழியே யோகம் தியானம் ஆகியவை.

சக்தி என்கிற சொல் மனித ஆற்றலைக் குறிக்கிறது. பொருள் தன்மை சார்ந்து பார்க்கிறபோது அதுசெயலாக வெளிப்படுகிறது. அது மட்டுமே சக்தி அல்ல.

உள்நிலையில் மனிதனுக்கென்று ஒரு சக்தி நிலை உள்ளது. அந்த சக்தி நிலையை மேம்படுத்துவதற்கென்று தான், யோக, தியானம் என்ற ஆன்ம பயிற்சிகள் உள்ளன. ஆனால், யோகா மற்றும் தியானத்தின் மூல நோக்கமே இந்த சக்தியை மேம்படுத்துவதல்ல. அது ஒரு பக்க விளைவு.

தன் மூலத்தை மனிதன் உணர்வதற்காகத்தான் யோகா, தியானம் போன்றவை. இதில் இரண்டு கேள்விகளை பலர் எழுப்புகிறார்கள். ஒன்று, ஆன்மீக நிலையிபல பயிற்சிகள் மேற்கொண்டு சக்தி நிலையை உயர்த்த முற்படுவது செயல்கள் மூலம் வெளிப்பட வேண்டுமா?

இன்னொன்று, இன்றைய அறிவியல் உலகில், அதிகார வேட்டை போன்றவை நிறைந்திருக்கிற உலகில், வாழ்க்கையிலிருந்து மனிதனை விலகிப் போகிற மனநிலையை ஆன்மீகம் ஏற்படுத்துமா?

முதலில், சக்திநிலை மேம்பாடு செயலாக வெளிப்படுமா என்கிற கேள்வியைப்பார்க்கலாம். ஆன்மீகப் பயிற்சிகளை அடிப்படையில் உள்நிலை அறிவியலாக நீங்கள் அணுக வேண்டும். இன்று புற நிலை அறிவியலுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. ஆனால் புறநிலை அறிவியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிற சமூகத்தில் பொருளாதாரம் மேம்படுகிறதே தவிர வாழ்க்கை அவ்வளவு சுலபமாயில்லை.

மனிதர்களின் சுவாசக் காற்றில் கூட விஷத்தைக் கலக்கும் அளவிற்கு, வெளிநிலை அறிவியல் வளர்ச்சி எல்லைத் தாண்டி போய் விட்டது. எனவே, மனிதன் உள்நிலையில் கொண்டு வருகிற வளர்ச்சி இந்த சமூகத்திற்கு செயல்களாக வெளிப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள்.

தனக்கு எது கிடைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது என்கிற மனநிலை, தன்னை மையப்படுத்திக் கொள்கிற ஒரு அகங்காரத்தின் வெளிப்பாடே தவிர அது ஆன்மீகம் அல்ல. குறிப்பாக, ஆன்மீகப் பாதையில் உண்மையாகவே நடையிடுகிற ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சக்தி நிலை உயர உயர சில சக்திகள் கைவரப்பெறுவார்கள். ஒன்று, ஆன்மீகப் பயணத்தின் பாதையிலேயே இது வரலாம். அல்லது சில நல்ல இடங்களில் ஆன்மகப் பயிற்சியை மேற்கொண்டு பாதியில் கைவிடப்பட்டவருக்கும் இது அரைகுறையக் கிடைக்கலாம்.

உடனே, தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரைகுறை நிலைகளை வைத்துக்கொண்டு, அவற்றைப் பெரிதாக விளம்பரம் செய்ய முற்படுகிறார்கள்.

ஒரு மனிதன் சக்தி நிலையை மேம்படுத்துவது என்பது தன்னைத்தானே மேம்படுத்துவதற்குத் தானே தவிர, இன்னொரு மனிதரின் எதிர்காலத்தை கணித்துச் செல்வதற்கோ, அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதற்கோ அல்ல.

எல்லைகள் கடந்த ஒரு விடுதலை நோக்கித் தான் ஆத்ம சாதனைகள் தொடங்குகின்றன. சிறிது உள்ளுணர்வு மேம்பட்டவுடனேயே மற்றவர்களிடம் சென்று, திருமணத்திற்கு நாள் குறிப்பது, “இங்கே தண்ணீர் இருக்கிறது தோண்டுங்கள்” என்று சொல்வது என்றெல்லாம் சிலபேர் செய்தார்கள்.

ஆன்மீகப் பயிற்சி பெறுபவர்கள் இத்தகைய சித்திகளைப்பெற நேர்ந்தால் அவற்றை உள்நிலை நோக்கி திருப்பி விட வேண்டும். தங்கள் சக்தி நிலையை ஒரு கண்காட்சிபொருளாக மக்கள் மாற்றுவதில் பயனில்லை. மற்றவர்களால் செய்ய முடியாததை செய்து காட்டுவதற்கு ஆன்மீகம் தேவை இல்லை.

இது பல வகைகளிலும் மனிதர்களை சிறைப்படுத்திவிடும். இந்தியாவில் கூட கோயிலுக்குப் போகிற வழியெங்கும் கடைகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த கடைகளில் ஈர்கப்பட்டால் கடைசியில் கோயிலுக்குள் போக நேரமிருக்காது. இதுவும் இப்படித்தான்.

உள்நிலையிலிருக்கிற இறைத்தன்மையை உணர்வதற்காகச் செல்கிற வழியில் சிலர் வணிக மனப்பான்மையோடு தங்கள் சக்தி நிலைகளை வீணடிக்கத் தொடங்கினால் அவர்களால் தங்களை உணர முடியாது. எனவே, ஏராளமான செயல்கள் மூலமோ, சித்து வேலைகள் மூலமோ தங்களை வெளிக் காட்டிக் கொள்கிற, பணியை ஆன்மீகப் பாதையில் நடையிடுபவர்கள் பெரும்பாலும் செய்வதில்லை.

வாழ்க்கையை வெறும் பொருள் தன்மை சார்ந்து உணர்ந்து வைத்திருப்பவர்கள் தான் ஒரு மனிதனை உடல் நோயிலிருந்தோ, பொருளாதரத் தொல்லையிலிருந்து விடுவிப்பது தான் மிகப் பெரிய சாதனை என்று கருதுவார்கள். பொருள் தன்மை சார்ந்த கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு உள்நோக்கி வளர்வதற்கு பெயர்தான் விடுதலை என்பது.

அதேபோல, இன்று அதிகாரபலம் அதிகம் இருக்கிற சூழ்நிலையில், யோகம், தியானம் போன்றவை எந்த அளவிற்கு உதவும் என்ற கேள்வியும் எழுந்திருக்கறது. வெளிச் சூலி பொருளாதர பலமும், அதிகார பலமும் வளர்ந்திருக்கிறது என்பது உண்மையானால் எப்போதும் இருந்ததை விட இப்போதுதான் ஆன்மீகத்திற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பணம், பதவி, அதிகாரம், போக வாழ்க்கை போன்றவற்றை எல்லாம் மனிதன் ஏன் தேடிப் போகிறான், என்றால் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று அடிப்படையில் அவனுக்குள் ஒரு வேட்கையிருக்கிறது. அதற்கென்று பலவிதமான முயற்சிகளை மனிதன் மேற்கொள்கிறான்.

உலக இன்பங்களையே ஆனந்தம் என்று ஒரு எல்லைவரைக் கருதிக்கொண்டிருக்கிறான். சிலருக்கு பணம் சேர்ப்பது இன்பம். சிலருக்கு பெரிய அதிகாரத்தை அனுபவிப்பது இன்பம். சிலருக்கு களியாட்டங்களில் ஈடுபடுவது இன்பம். ஒரு எல்லைவரை இதை ஆனந்தம் என்று மனிதன் தவறாகப் புரிந்துகொள்வான். ஆனால் அது ஆனந்தம் இல்லை என்பது காலம் கடந்து புரிகிறப்போது வருத்தத்தில் ஆழ்ந்துவிடுவான்.

எப்போது நிறைய அதிகாரமும்,பொருளாதாரமும் மனிதனிடம் இருகிறதோ அப்போது அவற்றை உரிய முறையில் கையாளுகிற முதிர்ச்சியை அவனுக்குத்தரவேண்டம். அத்தகைய முதிர்ச்சியை தருபவைதான் யோகா, தியானம் போன்றவை. அதனால்தான் சொன்னேன் உள்ளபடியே அதிகாரமான சூல் இருக்குமானால், அந்த சமூகத்தில்தான் ஆன்மீகத் தேடலுக்கான அவசியம் அதிகரிக்கிறது என்று.

அதிகாரங்களை மன முதிர்ச்சியோடு கையாளத் தெரியாத மனிதர்கள் தாங்களும் துன்பமடைந்து மற்றவர்களையும், துன்பத்திற்கு ஆளாக்குவார்கள்.

சமூகம் சார்ந்த பொறுப்புணர்வை தியானம் ஏற்படுத்துகிறது. செயல்களைக் கடந்து கண்மூடி அமைதியாக இருப்பதென்பது சோம்பேறித் தனத்தினால் அல்ல. அது அளவுகடந்த பொறுப்புணர்ச்சியின் அடையாளம்.

மற்றவர்கள் மேல், ஆதிக்கம் செலுத்துகிற சூழ்நிலையில் இருப்பவர்கள் மிக நிச்சயமாக தங்கள் உள் நிலையை சம்ச்சீராக வைத்துக் கொள்வது அவசியம். அதிகார போதையின் உச்சத்தில் இருந்த ஒரு மனிதரை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

முசோலினி பெரிய சர்வாதிகாரி. அவரது ஆட்சியில் ஒரு காரியம் செய்தார் அதனை சாதனை என்று அவர் கருதினார். இத்தாலியில் அப்போது ரயில்களெல்லாம் தாமதமாக வந்து கொண்டிருந்தன. இது முசோலினிக்குப் பிடிக்கவில்லை. எனவே, சில என்ஜின் ஓட்டுநர்களைப் பிடித்து சுட்டுக் கொன்று “தாமதமாக ரயில்கள் வந்தால் உங்களுக்கு இதுதான் கதி” என்று எச்சரிக்கை விடுத்தார். முசோலினி. அன்று தொடங்கி இத்தாலியில் ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடத் தொடங்கின.

இது மாதிரியான சம்பவம் அதுவரை வரலாற்றில் நிகழ்ந்ததேயில்லை. ஆனால், அன்று அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டது. இதை ஒரு பெரிய சாதனை என்று நம்பி, முசோலினி ஏகத்திற்கு மகிழ்ச்சியடைந்தார். அந்த சாதனையைக் கொண்டாடும் விதமாக, தன் உருவத்தை ஒரு அஞ்சல் தலையாக வெளியிட முடிவு செய்தார். இத்தாலியில் ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடுவதையொட்டி முசோலியின் உருவத்தோடு ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

இந்த அஞ்சல் தலையை வெளியிட்டு கொஞ்சகாலம் கழிந்தது. இதில் ஒரு சிக்கல் இருப்பதை எல்லோரும் உணரத் தொடங்கினார்கள். எப்போதெல்லாம் இந்த அஞ்சல் தலை ஒட்டப்படுகிறதோ, அப்போதெல்லாம் சீக்கிரம் அந்த அஞ்சல் தலைகள் உறையிலிருந்து விழுந்து விடுவதை, கவனிக்கத் தொடங்கினார்கள்.

அஞ்சல் துறையின் கவனத்திற்கு சென்ற இந்த சிக்கல், முசோலியின் கவனத்திற்கும் கொண்டு போகப்பட்டது. இதற்கு மத்தியில் ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று, தகவல் துறையினர் ஒரு ஆய்வு செய்தனர். அதற்குள் கோபமடைந்த முசோலினி அஞ்சலக அலுவலர்களை அழைத்தான். “ஏன் சரியான பசைகளை நீங்கள் பயன்படுத்துவதில்லை. அஞ்சல் தலைகள் உதிர்ந்து தபால்காரரின் பைக்குள் நிறைய அஞ்சல் தலைகள் விழுந்து விடுகிறதாமே ஏன் இப்படி?” என்று கடிந்து கொண்டான்.

அந்தத் தலைமை தபால், அதிகாரி மிகுந்த அச்சத்தோடும், தயக்கத்தோடும் முசோலினியிடம், “ஐயா, இருப்பதிலேயே தலைசிறந்த தரத்தில் தான் பசைகளை நாம் அஞ்சல் நிலையங்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் அஞ்சல் நிலையங்களில் வந்து இந்த அஞ்சல் தலையை வாங்கி ஒட்டுகிற பெரும்பாலானவ்கள், பசையைப் பயன்படுத்துவதில்லை. அதன் பின் புறத்தில் எச்சில் தடவித்தான் ஒட்ட விரும்புகிறார்கள். அதனால்தான் இந்த அஞ்சல் தலைகள் மட்டும் தபாலில் தங்குவதில்லை. உதிர்ந்து விடுகின்றன” என்று சொன்னாராம்.

தன்னைத் தானே வியந்து பாராட்டி அஞ்சல் தலை வெளியிடுமளவுக்கு முசோலியின் அதிகார போதை அவனை ஆட்டுவித்தது. ஆனால் அந்த சமுதாயமோ அவனை ஆட்டுவித்தது. ஆனால் அந்த சமுதாயமோ அந்த அஞ்சல் தலையில் எச்சில் துப்பி அவனை அவமானப்படுத்தத்தான் ஆசைகொண்டது. அதிகார வசதி கையிலிருக்கும் போது உள் நிலை சமச்சீராக இல்லாத மனிதர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். எனவே, உள்நிலை அறிவியலாகக்கண்ட, தியானம், யோகா இன்றுதான் அதிகம் தேவைப்படுகிறது.

மனிதன், தன்னை உணர்ந்து கொள்வதற்கான வழிகளாக கர்ம யோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய மூன்றும் உள்ளன.

ஆழ்நிலையில் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும், இவற்றிற்கென்று தனி இயல்புகள் உண்டு. செயல்களின் வழியாக, மனிதன் தன்னை உணரும் நிலைக்கு கர்மயோகம் என்று பெயர்.

இயல்பிலேயே மனிதன் செயல்பட்டுக் கொண்டேயிருப்பான். செய்வதற்கென்று நிறையப் பணிகள் இருக்குமேயானால், தான் நன்றாக இருப்பதாக அவன் நினைத்துக்கொள்கிறான். செயல்களை போதிய விழிப்புணர்வோடு செய்யும் போது அது, பயன் கருதி நிகழ்வதில்லை. அப்போதுதான் கர்மயோகம் என்ற சொல்லக் கூடிய நிலையை உங்கள் செயல் எட்டும்.

அன்பு நிலையில் இருப்பதன் பெயரே பக்தி அந்தச் சொல்லுக்குப் பொருள், காண்பவை, காணாதவை அனைத்தின் மீதும் அன்பு கொண்டிருப்பதுதான்.

வழிபாட்டின் போதோ அல்லது, ஒரு சில நேரங்களில் மட்டுமோ, அன்பு நிலையை உணர்ந்தால் அதன் பெயர் பக்தி அல்ல. அது இடையறாமல் நிகழ்வது.

விருப்பு, வெறுப்பற்ற தன்மையில்தான் இந்த மனநிலை ஏற்படும். ஒன்றின் மீது விருப்பம், என்றாலே இயல்பாக இன்னொன்று வெறுக்கப்படும்.

உலகம் முழுவதும் அழகானதாக தென்படும்போது, அன்பு நிலையில் இருப்பதாக அர்த்தம். சில தனிமனிதர்கள் மீது மட்டும், ஏற்படுகிற பற்றுதல் அன்பு ஆகிவிடாது.

எல்லாவிதமான, உணர்வுகளிலேயும் அடுத்தவர்கள் மேல் காட்டுகிற பரிவுதான் தலைசிறந்த உணர்வு.

அன்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்ல. அது, ஆழமான ஆனால் அழகான வலி. மிக இயல்பாக கண்களிலிருந்து கண்ணீரை அன்பு வரவைக்கும்.

மேற்கத்திய நாடுகளில் கண்ணீர் வடிப்பதை பெரிய அளவில் அங்கீகரிப்பதில்லை. ஆனால், இந்தியாவில் தொன்மையான வாழ்க்கை முறை கண்ணீரை ஒரு மனிதரின் நுட்பமான உள் தன்மையின் அடையாளமாகவே உணர்த்துகிறது.

பொதுவாகவே, ஒரு மனிதன் எது குறித்து அதிகம் சிந்திக்கிறானோ அதைச்சார்ந்தே அவன் அதிகம் பெறுகிறான். எனவே ஆத்ம சாதனைகளால் அன்பு நிலை சார்ந்து ஒரு மனிதனுடைய உணர்வுகள் தீவிரமடையும் போது, தன்னுடைய ஆற்றலை உணரமுடிகிறது.

அன்பு செய்தல் என்று எதுவுமேயில்லை. அன்பு நிகழ. அனுமதிக்க முடியுமே தவிர அன்பு செய்வது இயலாது. ஏனெனில் அன்பு என்பது ஒரு தன்மை. தியானம் எப்படியொரு தன்மையோ, ஆன்மீகம் எப்படியொரு தன்மையோ அதுபோல தான் அன்பும்.

ஒவ்வொரு மனிதரும் தன்வாழ்வில் ஏதாவது ஒரு விநாடியில் அன்பின் தன்மையை உணர்ந்திருப்பார். அது எல்லோருக்கும் ஒரு விநாடியாவது ஏற்பட்டிருக்கும். அந்த ஒரு விநாடியில் அவர் உணர்ந்த அன்பின் தன்மையை தக்கவைத்துக் கொள்ள அவருக்குத் தெரியவில்லை.

ஒரு மனிதர் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பதென்பது வாழ்வில் எப்போதோ ஏற்படும் அனுபவமல்ல. அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அதனை விழிப்புணர்வோடு அறிந்து கொள்கிற வாய்ப்பை தியானம் ஏற்படுத்துகிறது.

இத்தகைய தன்மையை மனிதருக்குள் ஏற்படுத்துவது கர்மயோகம், பக்தியோகம், ஞான யோகம் மூன்றிலுமே சாத்தியம்.

உள்நிலை பற்றிய விழிப்புணர்வின் மூலம், தன்னிடம் அன்பு, எப்போதோ ஏற்படும் உணர்வாகயிருக்கிறதா? அல்லது நிலையான தன்மையாய் இருக்கிறதா? என்பதை உணர முடியும்.

பற்றுதல்களையும், பலவீனங்களையும் அன்பு என்று தவறாகப் புரிந்துகொண்டு அவற்றன்பாதிப்பில் இருக்கும்வரை மனிதன் தன்னுடைய ஆற்றலை எவ்விதத்திலும் உணர முடியாது.

ஒவ்வொரு உயிரும் அன்பைத்தான் தேடுகிறது. சிலருக்கு அது பாதுகாப்பு ஏற்படாகவோ, பரஸ்பரம் நன்மை தரும் திட்டங்கள் போலவோ, ஆகிவிடாமல் உயிரின் இயல்பான தன்மை அன்பு என்பதை உணர்கிற போது மனிதன் எண்ணிப்பாராத அளவு பயன்பெறுகிறான்.

விழிப்புணர்வு இல்லாத மனிதர்களைப் பொறுத்தவரை தன்னை மறந்த நிலைகளிலெல்லாம், அகங்காரம் இன்றிதான் காணப்டுகிறார்கள் விளையாடும்போது தன்னை மறந்து விளையாடுகிறார்கள். கீழே விழுந்தால் உடனே அகங்காரம் எழுந்து விடுகிறது.

குளியறையில் தன்னை மறந்து குளியலில் ஈடுபடும்போது அகங்காரம் இருப்பதில்லை. யாராவது, கதவைத் தட்டினால் உடனே அகங்காரம் எழுகிறது. எனவே, மனிதர்களுக்கு “அகங்காரம்” ஒரு முகமூடி போல் இருக்கிறது.

அதனைக் கையில் வைத்திருக்கிற மனிதன் தன்னையும் அறியாமல் சில நேரங்களில் கீழே வைத்து விடுகிறான். யாராவது வந்தால் உடனே அதனை மீண்டும் அணிந்து கொள்கிறான்.

“தன்னை உணர்ந்த ஞானிகளுக்கு அகங்காரம் இருக்குமா?” என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்.

அகங்காரத்துக்குள்ளேயே சிக்கி உழுன்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் அந்த அகங்காரத்தையே தன் அடையாளம் என்று கருதிக் கொண்டேயிருக்கிறான். அது தன் அடையாளம் அல்ல என்கிற தெளிவு ஏற்படும் போது, அதற்கு “விழிப்புணர்வு” என்று பெயர்.

அடிப்படையில், அகங்காரம் என்பது ஒரு பாதுக்காப்பு ஏற்பாடு. அது பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடு.

ஒரு மனிதன், தன் எல்லையற்ற தன்மையை, ஒரு எல்லைக்குட்பட்ட உடலோடோ, வேறு சில எல்லைகளோடோ அடையாளப்படுத்தத் தொடங்கும்போது அது “அகங்காரம்” ஆகிறது.

தன்னுடைய அகங்காரம் இன்னொரு மனிதனின் அகங்காரத்தால் ஆக்கிரமிக்கப்படும்போது சிக்கல் ஏற்படுகிறது.

மாறாக, அன்பு நிலையில் அவரிடம் இன்னொருவர் கரைந்து போகிபோது அங்கே ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், போன்றவற்றிற்கு இடமில்லை.

ஒரு கைக்குழந்தைக்குக் கூட தேவையான நேரத்தில் தேவையான உணவு தரப்படாவிட்டால் கோபம் வருகிறது.

கோபத்தை வெளிப்படுத்த குழந்தை வீறிட்டு அழுகிறது இத்தனைக்கும் அந்தக் குழந்தைக்கு தன் பெயர் என்னவென்று கூட தெரியாது. ஆனால், தன்னைப் பற்றிய எண்ணம் அதற்குள் ஏற்பட்டு விடுகிறது.

“அகங்காரம்” எனபது நிழலைப் போன்றது. உடல் என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டால் எப்படி நிழல் விழுவதைத் தடுக்க முடியாதோ அதைப்போல அகங்காரம் எழுவதையும் தடுக்க முடியாது.

சிலர், என்னிடம் வந்து “ஊரில் மழை பெய்யவில்லை ஏதாவது செய்து மழை வர ஏற்பாடு செய்யுங்கள்” என்றுசில சமயங்களில் கேட்பதுண்டு. இதுவே, அகங்காரத்தின் வெளிப்பாடுதான்.

இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்வது, தங்கள் சுயநலத்திற்கு இயற்கைய மாசுபடுத்தும் தொழில்களை செய்வது, பிறகு யாரைக் கொண்டாவது மழையை வரழைத்து விடாலம் என்று கருதுவது, அகங்காரம் இல்லாமல் வேறென்ன?

மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார். “இந்த உலகில் எல்லா மனிதர்களின் தேவைக்கும் உரிய செல்வம் இருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதனின் பேராசைக்குத்தான் அது போதாது” என்றார்.

இத்தைகய அகங்காரம் அழிவுகளை ஏற்படுத்தும், அகங்காரத்தை முழுமையாக அகற்றுவதைவிட அதனை நேர்மறையாகப் பயன்படுத்துவதே நல்லது.

அகங்காரத்தை உற்றுக் கவனித்து, அதுவே “தான்” என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தன்மையிலிருந்து விடுபட்டு, அகங்காரத்தால் தனிமைப்பட்டுப் போகும் உயிரை மற்ற உயிர்களோடு அன்பில் கரைத்துக் கொள்வதே மனிதகுலத்திற்கு மேன்மைகள் தரும்.

வாழ்க்கையை பலரும் வாக்குவாதங்களிலேயே கழிக்கிறார்கள். தாங்கள் விரும்புவதை செய்வதுதான் “சுதந்திரம்” என்று பலரும் எண்ணுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் எதைச் சுதந்திரமென்று மனிதன் கருதுகிறானோ, அதுவே அவனைப் பிணைத்து வைக்கிற விலங்காக மாறுகிறது.

புகைப்பிடிப்பதை ஒரு மனிதர் விரும்புகிறார். அதையே தன் சுதந்திரம் என்றும் கருதுகிறார். ஆனால், சுற்றிலும் பெட்ரோல் சிந்தியிருக்கும்போது, “ சிகரெட் பிடிப்பது என் விருப்பம்” என்கிற அகங்காரம் வெளிப்பட்டால், அது அழிவைத் தரும்.

சின்ன சின்ன விஷயங்களுக்கும், நிபந்தனை விதிக்கிற மனப்பான்மை மனிதனுக்கு இருக்கிறது. வாழ்க்கை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் மனிதனுக்கு, எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஆனால், தனகுத்தானே விதித்துக் கொள்கிற நிபந்தனைகளால் மனிதன், தன் எல்லைகளைக் குறுக்கிக்கொண்டு சிரமப்படுகிறான்.

‘விழிப்புணர்வு’ இந்த நிலையை மாற்றி மனினை அன்புமயமாக ஆக்கும்.

மனிதனின் உணர்வு நிலையிலேயே உச்சகட்டமானது அன்புதான். அன்பு என்பது ஆழமான அழகான வலி. அன்பு சக உயிர்கள் மீதான, பரிவாக வெளிப்படும். அந்த வலியின் விளைவாகக் கண்ணீர் வெளிப்படும்.அது அற்புதமான அனுபவம் மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வதுதான் அன்பின் அடையாளம்.

மேற்கத்திய நாடுகளில்தான் கண்ணீர் என்பது பலவீனத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியத்தில் கண்ணீர் என்பது மனம் அன்புமயமாகவும், மென்மையாகவும் இருப்பதைக் குறிக்கிறது. உள்முகமாக, மனிதனைத திருப்பி விடுகிற நிகழச்சிகள் பல. அதை மனிதன், எந்த விதத்தில் உணர்ந்து கொள்கிறானோ, அதற்கேற்ப அவன் இயல்பு மாறுகிறது.

உதாரணமாக, பெங்களூரில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் இருந்தார் கடும் நோய்வாய்ப்பட்டு ஆறு மாதம் படுக்கையில் இருந்தார். மரணத்திற்கும், வாழ்க்கைக்குமான போராட்டமாக அது இருந்தது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தார். அத்தனை காலம், மருத்துவமனையில் இருந்ததால், எல்லாவற்றையுமே இழந்திருந்தார். எனினும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புபோது முன்பைவிடவும் அமைதியாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியிருந்தார்.

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலை அவருக்கு எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த மரணப் போராட்டம் காரணமாக வாழ்க்கை குறித்த தெளிவு அவருக்கு ஏற்பட்டிருந்தது.

உள் நிலையில், தெளிவு தோன்றவும், தன்னைக் குறித்த அகங்காரமும், அடையாளங்களும் மாறவும், ஒரு மனிதனுக்கு தியானம் மிகவும் அவசியம். தியானம் என்பது ஒருவர் மேற்கொள்கிற பயற்சியல்ல, தன் இயல்பு நிலையோடு இருப்பது தனக்குள் இருக்கிற உண்மையை உணர்வது.

வெளிச்சூழ்நிலையை மனிதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தன்னுடைய உள்நிலை குறித்த தெளிவு அவசியமாகிறது. அந்தத் தெளிவு வரும்வரை சிறிய நிபந்தனைக்களுக்குள், எல்லைகளுக்குள் மனிதன் சிறைபட்டிருப்பதோடு அதுவே, வாழ்வின் பலம் என்றும், தவறாகப் புரிந்து கொள்கிறான்.

தானே, வகுத்திருக்கும் தடைகளிலிருந்து, மனிதனை விடுவிக்க வல்லதுதான் “தியானம்”

தியானம் என்று சொன்ன மாத்திரத்திலேயே அது குறித்து ஏராளமான, சந்தேகங்கள் தான் எல்லருக்கும் ஏற்படுகின்றன.

தியானமும், பிரார்த்தினையும் ஒன்றா? வாழ்வில், நாம் விரும்பும் நன்மைகளை தியானம் தருமா? என்றெல்லாம், பலர் கேட்கின்றனர். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையோடு யாரக்கும், எந்தப் பிரச்னைஐயும் இல்லை. இவர்கள் விருப்பத்திற்கேற்ப, வாழ்க்கை இல்லை என்பதில் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உடல், மனம், ஆகிய இரண்டு எல்லைகளுக்குள் மனிதன் இருக்கிற வரை அவன் விருப்பத்திற்கேற்ப வாழக்கை அமையாது. ஏனெனில், அந்த நிலைகளைப் பொறுத்தவரை புறச்சூழ்நிலைதான் வாழ்வைத் தீர்மானிக்கிறது. இந்த எல்லைகளைக்கடந்து உயிரின் மூலத்தை உணர்தற்கான கருவிதான் தியானம்.

பிரார்த்தனை என்பது, இப்போதெல்லாம் பக்தியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. கடவுளிடம் வைக்கின்ற கோரிக்கைகளையே நாம், பிரார்த்தனை என்று புரிந்து கொள்கிறோம்.

உங்கள் கவலைகள், தேவைகள், ஆசைகள், அச்சங்கள் என்று நீண்ட புலம்பல்களின் பட்டியலை, பிரார்த்தனை என்று கருதுகிறீர்கள். அதுவம், உங்களுக்கு போதிக்கப்பட ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. அது வெறும் கோரிக்கைகளை இருக்கும் வரை பிரார்த்தனையால் புனிதத்தன்மை இருக்காது. ஆனால்; பிரார்த்தனையின் அடிப்படை கடவுளிடம் பேசுகிற முயற்சி, பிரார்த்தனை வழியாக கடவுளிடம் பேசுகிறீர்கள்.

இதி என்ன சிக்கல் என்றால், இத்தனை ஆண்டுகளில் நீங்களே தொடர்ந்து, பேசிக்கொண்டேயிருக்கிறீர்களே தவிர அவரை ஒருவார்த்தைக்கூடப் பேச அனுமதிக்கவில்லை. நீங்கள் ஒரு நண்பரைப் பார்க்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீட்டில் போய் அவரை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்காமல் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் என்னாகும். அடுத்தமுறை நீங்கள் அவர் வீட்டுக்குப் போகும் போது அவர் உங்களைப் பார்க்கவே பயப்படுவார். வீட்டுக்குள் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவார்.

இப்போது கடவுளிடமும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்து அவர் இருந்து கொண்டே இல்லாது போல் பாசாங்கு செய்கிறார். எனவே, நீங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டு, கடவுளைப் பேச அனுமதிப்பதற்குத்தான், தியானம் என்று பெயர்.

தியானம் என்பது, இந்தப் படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வழி. வெறுமனே கண்மூடி அமர்வது, தியானமல்ல. பலர், வசியக் கலைக்கும், தியானத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி என்னிடம் கேட்டிருக்கிறீர்கள். இரண்டும் ஒன்றுக்கொண்டு எதிரான நிலைகள். வசயத்தின் போது, யாரோ ஒருவர், அல்லது ஏதோ ஒன்றின் ஆளுமைக்குள் நீங்கள் அல்லது ஏதோ ஒன்றன் ஆளுமைக்குள் நங்கள் அகப்படுகிறீர்கள். அப்போது விழிப்புநிலை இருக்காது. ஆனால், தியானம் என்பது முழு விழிப்புணர்வில் நிகழ்வது. தியானத்தில் எல்லாற்றிடமிருந்தும் விலகி, சுதந்திரமாக இருக்கிறீர்கள். சுதந்திரம் பொதுவாகவே அச்சமூட்டுவதாய் இருக்கிறது. அதனால் தான் மேலை நாடுகளில், தியானம் என்றாலே அஞ்சுகிற நிலை இருந்தது. எல்லோரும், சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக்கொண்டால் கூட அடிப்படையில் ஏதாவதொன்றில் சிறைப்பட்டிருக்கவே விரும்புகிறார்கள்.

மனைவிமார்கள் மீது, கணவன்கள் ஒரு புகார் சொல்வதுண்டு. எப்பதும் தங்களைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறாரகள். அது வேண்டும், அது வேண்டும். அங்கே அழைத்துச் செல்லுங்கள் என்று தொல்லைப்படுத்திக்க கொண்டேயிருக்கிறார்கள், என்று கணவன்மார்கள் அலுத்துக்கொள்வதுண்டு. அந்தப் பெண்கள் தியானம் செய்யத் தொடங்கியபின் தமது கணவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. உடனே இந்தக் கணவன்மார்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். பெண்கள் யாரையும் சாராமல் தனித்திருப்பதும் தங்களையும் தொல்லை செய்யாமல் இருப்பதும், அவர்களை தடுமாறச் செய்கிறது.

தியானத்தின் வழியாக சார்பு நிலையிலிருந்து விடுதலைபெற முடியும், என்கிற அனுபவ உண்மைக்கு மனம், முதலில் தயாரடைய வேண்டும். தியானம் என்பது விழிப்புநிலை, தியானம் என்பது சுதந்திரம்.

தியானம் என்பது சுதந்திரம் என்பதைவிட தியானம் என்பதே சுதந்திரம் என்று சொல்ல வேண்டும்.

தன்னை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனை யாரும், எதுவும், அடிமைப்படுத்திவிட முடியாது.

மனிதனின் புறவாழ்வுக்காக சில திறமைகள், தகுதிகள் தேவைப்படுகின்றன. அந்தத் திறமைகளோடும், தகுதிகளோடும் மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டால், அதைத் தாண்டி வளர இயலாது. புறச்சூழலின் வெற்றிக்காக பெற்றிருக்கும் தகுதிகளே தடைகளாக மாறி மனிதனை அடிமைப்படுத்த வாய்ப்புண்டு.

மாறாக, விழிப்புணர்வு நிலையில், எதனோடும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத தன்மையில் இருக்கும்போது மனிதன் விரைவாக வளரமுடியும். அந்த விழிப்புணர்வை தியானம் தருகிறது.

மனிதன் தேடிப் பெறுகிற தகவல் அறிவு அவனது உலக வாழ்க்கைக்குத் துணை புரிகிறது. ஆனால், தகவல் திரட்டு மட்டுமே இருந்தால் அந்தத் தகவல் திரட்ட உரிய முறையில் அறிவாக வெளிப்படுத்த முடியும்.

தன் இயல்பான தன்மையை உணர்த்த ஒருவன், வாழ்வில் அன்பாக, அமைதியாக, ஆனந்தமாக இருக்க முடியும். தன்னுடைய சக்தியைத் தெரிந்து கொள்ளாத போதுதான் பதட்டம் வளரும், பயம் வளரும், சுயநலம் கூடும்.

மனிதனின் உடல் - மனம் - அறிவு - ஆன்மீகத் தேடல் அனைத்தையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து, உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணை புரிய ஈஷா யோகா மையம் ஏற்படுத்தியிருக்கும் வழியே “சஹஜ ஸ்திதி யோகா”

சஹஜ ஸ்திதி யோகா என்றால், “இயல்பாக வாழும் கலை” என்று பொருள்.

தன் இயல்பு வாழ்க்கையில் இருந்தபடியே தன்னை மேம்படுத்திக் கொள்ள அனைவருக்கும் வழங்கப்படும் அரிய வாய்ப்பு இது.

சஹஜ ஸ்திதி யோகா, எந்தவொரு பழக்கத்தயும் விடச்சொல்லி வற்புறுத்துவதில்லை. எந்தவொரு மனநிலையையும் மாற்ற சொல்லி வற்புறுத்தவதில்லை. அனுபவ ரீதியாக எதையும் உணர்ந்து, வேண்டாதவறை விலக்கிக் கொள்வதற்கான, விழிப்புணர்வைத் தருகிறது.

இதுவரை உணராத பரிமாணத்தில் வாழ்கையை மனிதன் உணரத் தொடங்குகிறான். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவை வெளியிலிருந்து பெருவதர்க்கல்ல. மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் இயல்புதான் என்பதை அனுபவ அடிப்படையில் உணரும்போது முற்றிலும் புதிய பார்வை கிடைக்கிறது.

செயல்திறன் அதிகரித்தல், உடல் நலம், மன அமைதி இவையெல்லாம் சஹஜ ஸ்திதி யோகாவில் முக்கிய அம்சங்களல்ல. அவை பக்க விளைவுகள்தான்.

மனிதன் தன்னை உணர்ந்து, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்து, உயிர்களிடையே பேதமில்லை என்கிற அனுபத்தைப் பெறுவதே சஹஜ ஸ்திதி யோகாவின் முக்கிய நோக்கம்.

நோய் வாய்ப்பட்டிருக்கும் மனிதன் சஹஜ ஸ்திதி யோகாவிற்குப் பிறகு, நோயின் தன்மையை உணர்கிறான். ஆனால், அதனால் துன்பமடைவதில்லை.

சில அடிப்படை அணுகுமுறைகள் மாறும்போதே சில நோய்கள் அவனைவிட்டு விலகுவதை இங்கே காணமுடியும்.

கோபம், பதட்டம், போன்றவை தங்கள் பிறவிக் குணங்கள் என்று கருதியவர்கள், வகுப்புகள் தொடங்கி சில நாட்களிலேயே அந்த குணங்கள் தங்களை விட்டு விலகுவதைக் காண்கிறார்கள்.

சஹஜ ஸ்திதி யோகா, நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ஆழ்ந்த யோக அறிவியலின் வெளிப்பாடு.

எல்லா வயதினருக்கும் பொதுவான தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயிற்சி, மனிதன் தனது அடிப்படை சக்தியை நன்கு உணரவும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

உலகின் பல பகுதிகளிலும் பரவியுள்ள சஹஜ ஸ்திதி யோகாவை “தன்னை உணர்வதற்கான அமைதிப்புரட்சி” என்று அழைக்கிறோம். இந்த அமைதிப் புரட்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அன்பும் வாழ்த்துகளும்...

தியானம் எப்படி செய்வது?